இந்தியாவின் மோடியின் அரசாங்கம் இலங்கையின் பிரிவினை வாதத்திற்கு ஜெயலலிதாவை விட மும்மடங்கு துணை போகும். எனவே, அரசாங்கம் தப்புக் கணக்கு போடக்கூடாது என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் வசந்த பண்டார தெரிவித்தார்.
மோடி அரசாங்கத்துடன் இலங்கை அரசாங்கம் ராஜதந்திர நட்புறவை மேம்படுத்திக் கொள்ள வேண்டுமென்றும் அவர் கூறினார்.
இது தொடர்பாக டாக்டர் வசந்த பண்டார மேலும் தெரிவிக்கையில்,
மோடியின் அரசாங்கம் பெரும்பான்மை பலம் கொண்ட அரசாங்கமாகும். எனவேஇ ஜெயலலிதாவின் ஆதரவு அவசியமில்லைஎன்பது உண்மை.
ஆனால், தமிழ் நாட்டில் பெரும்பான்மை பெற்ற ஜெயலலிதாவின் பலத்தை உடைப்பதற்கும் பாரதீய ஜனதா கட்சியின் ஆளுமையை தமிழ்நாட்டில் நிலை நிறுத்துவதற்கும் மோடியின் அரசாங்கம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும்.
இது இலகுவாக அமையும். இந்துத்துவ தீவிரவாத கொள்கையை தமிழ்நாட்டு மக்கள் ஆதரிப்பார்கள். அத்தோடு வைகோ போன்ற பிரிவினை வாத புலி ஆதரவாளர்களின் உதவியும் மோடிக்கு கிடைக்கும். எனவே தமிழ்நாட்டில் பாரதீய ஜனதா கட்சியின் அதிகாரத்தை நிலை நாட்டுவதற்காக மோடியின் அரசாங்கம் ஜெயலலிதாவை விட
மும்மடங்கு இலங்கையில் பிரிவினை வாதத்திற்கு துணை போகும்.
எனவே, அரசாங்கம் ஜெயலலிதாவின் அழுத்தம் மோடிக்கு இல்லையென்பதால் இலங்கைக்கு பிரச்சினை இல்லையென தப்புக் கணக்கு போடக்கூடாது.
மோடியின் பதவியேற்பு வைபவத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ கலந்து கொள்வது நல்லது. இவ்விஜயத்தை நன்கு பயன்படுத்திக் கொண்டு மோடியின் அரசாங்கத்துடனான ராஜதந்திர நட்புறவை வலுப்படுத்திக் கொள்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டுமென்றும் டாக்டர் வசந்த பண்டார தெரிவித்தார்.
















