வரதட்சணை கேட்டு கொடுமை செய்து , மருமகளை, கணவன் வீட்டார் உயிருடன் எரித்துக் கொன்ற சம்பவம், நெல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் பல்லராமபுரம் பகுதியை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி, இவரது மனைவி வெள்ளத்துரச்சி.
இவர்களுக்கு 1 வயதில் குழந்தை உள்ளது. இந்நிலையி்ல், வெள்ளத்துரச்சியை கணவன் வீட்டார் உயிருடன் எரித்துக் கொன்றனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அப்போதுதான் கேட்ட வரதட்சணையை பெண் வீட்டார் வழங்காததால் வெள்ளச்சியை, வெள்ளைச்சாமி வீட்டார் கொடுமை படுத்தி வந்துள்ளதும், அதனால் அவரை எரித்துக் கொன்றதும் தெரியவந்துள்ளது. இதனை அடுத்து போலீசார் சந்தேகத்தின் பேரில் வெள்ளைச்சாமி வீட்டார் மேல் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
















