அப்பாவி பெண்களை இலங்கையிலிருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு விபச்சாரிகளாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர் நிறுவனங்களால் அனுப்பி வைக்கப்படுகின்றனர் என்று அதிர்ச்சித் தகவல்கள் ஒன்று வெளியாகி உள்ளன.
வெளிநாட்டு பணிப் பெண் வேலை வழங்குகின்றார்கள் என்று பெண்களை குறிப்பாக யுவதிகளை நம்ப வைத்து விபாச்சாரிகளாக விநியோகிக்கின்றனர் என்று வெளிச்சத்துக்கு வந்து உள்ளது.
இவ்வாறான செயற்பாடுகளில் பெரும்பாலும் முஸ்லிம் முகவர்களே ஈடுபட்டு உள்ளனர் என்று சிங்கள இணையங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இவ்விதம் ஏமாற்றப்பட்டு டுபாய் நாட்டுக்கு அனுப்பப்பட்ட பெண் ஒருவர் திரும்பி வந்த பிற்பாடு இப்பயங்கரத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
















