அரசாங்கத்தின் உறுதியற்ற கருத்துக்களை நம்பி ஏமாறுவதற்கு நாம் தயாரில்லை:சுரேஷ் பிரே­மச்­சந்­திரன்

Suresh-Premachandran3அர­சாங்­கத்தின் உறு­தி­யற்ற கருத்­துக்­களை நம்பி ஏமாறத் தயா­ரில்லை. அர­சாங்கம் குறிப்­பிடும் பொலிஸ் அதி­கா­ரத்­திற்கு இணங்­கவும் மாட்டோம்,ஏற்­றுக்­கொள்­ளவும் மாட்டோம் என தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் ஊடகப் பேச்­சாளர் சுரேஷ் பிரே­மச்­சந்­திரன் தெரி­வித்தார். மாகாண சபை­யை பல­வீ­னப்­ப­டுத்தும் எந்­த­வொரு செயற்­பாட்­டி­னையும் தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பு ஒரு­போதும் செய்­யாது எனவும் அவர் சுட்­டிக்­காட்­டினார்.

பொலிஸ் அதி­கா­ரத்­திலும் விட்­டுக்­கொ­டுப்­பிற்கு தயார் என்ற அர­சாங்­கத்தின் கருத்து தொடர்பில் வின­விய போதே சுரேஸ் பிரே­மச்­சந்­திரன் எம்.பி.மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

நாட்டில் அதி­காரப் பகிர்­வி­னையும், மாகாண அதி­கா­ரங்­க­ளையும் கொண்டு வரு­வது இனப்­பி­ரச்­சி­னைக்கு தீர்­வினைக் காண்­ப­தற்கே தவிர எவ­ரி­னதும் தனிப்­பட்ட சுய­ந­லன்­க­ளுக்­காக அல்ல. இனக் குழு­மத்தின் அடிப்­ப­டையில் அதி­கா­ரங்­களை பகி­ரத்­த­யா­ரில்லை என அர­சாங்கம் பாரா­ளு­மன்­றத்தில் தெரி­வித்­தது. பொலிஸ் அதி­கா­ரத்­திலும் விட்­டுக்­கொ­டுப்­புக்குத் தயார் என தற்­போது குறிப்­பி­டு­கின்­றனர். அர­சாங்கம் தனது முடி­வினை உறு­தி­யா­கவும், தெளி­வா­கவும் குறிப்­பிட வேண்டும். சந்­தர்ப்ப, சூழ்­நி­லை­க­ளுக்­கேற்ப ஊட­கங்­களை சமா­ளிக்கும் கருத்­துக்­களை நம்பி செயற்­பட நாம் தயா­ரில்லை.

எவ்­வா­றான அதி­கா­ரங்­களை வழங்­கு­வது என்­பதை அர­சாங்கம் தீர்­மா­னித்து விட்­டது. 13ஆவது திருத்­தத்தை விடவும் குறை­வான அதி­கா­ரங்­களை கொண்டு சமா­ளிக்கும் இவ்­வ­கை­யான கருத்­துக்­களை தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு ஏற்­றுக்­கொள்­ள­வும்­மாட்டோம். அவற்­றிற்கு இணக்கம் தெரி­விக்­க­வும்­மாட்டோம்.

மேலும் அர­சாங்கம் நாட்டு மக்­களை திருப்­திப்­ப­டுத்த 13ஆம் திருத்­தத்தை செயற்­ப­டுத்­த­மாட்டோம் என குறிப்­பி­டு­கின்­றனர். எனினும் சர்­வ­தேச மட்­டத்தில் பேச்­சு­வார்த்­தை­களை மேற்­கொள்ளும் சந்­தர்ப்­பங்­களில் 13ஆம் திருத்­தத்­திற்கு அப்பால் அதி­கார பகிர்­விற்கு செல்­வ­தாக தெரி­விக்­கின்­றது. இவ்­வாறு நாட்­டையும், சர்­வ­தே­சத்­தையும் ஏமாற்றி செய்­வ­த­றி­யாது தடு­மா­றிக்­கொண்­டி­ருக்­கின்­றது. 13ஆவது திருத்­தத்­தினை பலப்­ப­டுத்த வேண்­டுமே தவிர அதனை பல­வீ­னப்­ப­டுத்தும் செயற்­பா­டு­களை தமிழ் மக்கள் விரும்­ப­வில்லை. தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பும் இவ் விட­யத்தில் மிகத் தெளி­வாக உள்­ளது. அர­சாங்கம் தரும் சொற்ப அதிகாரங்களின் மூலம் வடக்கில் விடுதலையினை பெற முடியாது.

இவ்வாறு அர்த்தமற்ற பேச்சுக்களை நம்பி 13ஆவது திருத்தத்தினை பலப்படுத்தும் எந்தவொரு செயற்பாட்டினையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மேற்கொள்ளாது எனவும் அவர் தெரிவித்தார்.

Tags: , ,

Leave a Reply