என்னை கர்ப்பிணி ஆக்கியவர் மீது நடவடிக்கை எடுங்கள்- பட்டதாரி பெண் போலீசில் புகார்

ஆசை வார்த்தை கூறி என்னை கர்ப்பிணி ஆக்கியவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பட்டதாரி பெண் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

சென்னிமலை, ஈங்கூர் ரோட்டில் உள்ள காந்திஜி வீதியில் ஜவுளி தொழில் செய்து வருபவர் சாமியப்பன். இவர் சென்னிமலையில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது மகன் ரகு (வயது 32).

சென்னிமலை அடுத்த பெரியார் நகரை சேர்ந்தவர் ஜீவிதா (26). பட்டதாரி. இவரது தந்தை மாதேஸ்வரன் இறந்து விட்டார். தனது தாயாருடன் வசித்து வருகிறார்.

இவரிடம் கடந்த 8 மாதங்களுக்கு முன் சாமியப்பன் மகன் ரகு என்கிற துரைராஜ் என்பவரின் ஜாதக நகலை தரகர் மூலம் கொடுத்தார். ஜாதகம் இருவருக்கும் பொருந்தியது. இதனால் ரகுவின் பெற்றோர் ஜீவிதாவை பெண் பார்க்க வந்தனர்.

திருமணத்திற்கும் சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து ஜீவிதாவும், ரகுவும் செல்போன் மூலம் பேசி பழகி வந்தனர்.

இந்த நிலையில் தன்னை திருமணம் செய்வதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்து விட்டு ஏமாற்றி விட்டதாக ரகு மீதும் மற்றும் இதற்கு உடைந்தையாக அவருடைய பெற்றோர் மீதும் ஜீவிதா ஈரோடு மகளிர் போலீஸ் நிலையத்தில் பரபரப்பு புகார் கொடுத்தார்.

நான் பி.இ. படித்துள்ளேன். எனக்கு சுமார் 3 கோடி மதிப்பிலான சொத்துக்கள் உள்ளது. திருமண தரகர் ஒருவர் மூலம் எனக்கு ரகுவின் ஜாதகம் வந்தது. அந்த ஜாதகம் எங்களுக்கு பொருந்தி இருந்ததால் திருமணம் உறுதி செய்யப்பட்டது. அதன்பிறகு நான் ரகுவிடம் பேசி கொள்வதற்காக தனியாக எனக்கு ஒரு செல்போனை ரகு வாங்கி கொடுத்தார்.

மேலும் எங்கள் வீட்டிற்கு ரகு அடிக்கடி வருவார். எங்கள் திருமணத்திற்கு மண்டபம் கிடைக்காமல் போனதால் திருமணம் தள்ளி கொண்டே போனது.

இந்த நிலையில் நாங்கள் காம்ப்ளக்ஸ் கட்டி வந்தோம். அதற்கு ரகு ஆலோசனைகள் வழங்கி உறுதுணையாக இருந்தார். கடந்த ஆடி மாதம் ரகு எங்கள் வீட்டிற்கு வந்து கேக் வெட்டி எனக்கு கொடுத்தார். பின்னர் கடந்த டிசம்பர் 23 -ந் தேதி இரவு எங்கள் வீட்டிற்கு ரகு வந்தார். அப்போது எனது அம்மா வெளியூர் சென்று விட்டதால் நான் தனியாக இருந்தேன். அந்த தனிமையை பயன்படுத்தி ரகு என்னை பாலியல் பலாத்காரம் செய்தார்.

நான் எவ்வளவோ மறுத்தும் என் விருப்பத்திற்கு மாறாக என்னை பாலியல் பலாத்காரம் செய்து விட்டார். திருமணம் ஆவதற்கு முன்பே என்னை இப்படி செய்து விட்டீர்களே என நான் கதறி அழுதேன். அதற்கு அவர், நான் உயிர் உள்ளவரை உன்னை கை விடமாட்டேன் என சத்தியம் செய்தார்.

மேலும் இதை வெளியில் சொல்ல வேண்டாம் என ரகு என்னிடம் சத்தியம் வாங்கினார். அதன் பின்னர் திருமணம் தள்ளிக்கொண்டே போனது. இதனால் நான் ரகுவை வர சொல்லி இது பற்றி கூறினேன். மேலும் மருத்துவ சோதனை செய்து பார்த்த போது நான் கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது.

நான் பயந்து போய் ரகுவிடம் சொல்லி அழுதேன். அதற்கு கவலைப்படாதே, உன்னை எந்த சூழ்நிலையிலும் கை விடமாட்டேன் என சத்தியம் செய்து எனக்கு கருச்சிதைவு மாத்திரை வாங்கி கொடுத்தார்.

திடீரென என் வீட்டுக்கு வருவதை ரகு நிறுத்தி கொண்டார். ஆனால் என்னை விட அதிகம் வசதியுள்ள வேறு பெண்ணை ரகு திருமணம் செய்ய முடிவு செய்திருப்பதும், இதற்காக ரகு வீட்டில் பந்தல் போட்டிருப்பதும் தெரியவந்தது.

இதுபற்றி உறவினர்கள் மூலம் கேட்ட போது நல்ல முடிவை சொல்கிறோம் என கூறிய ரகுவின் பெற்றோர் வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்று விட்டார்கள்.

நானும், ரகுவும் பேசியதை செல்போனில் பதிவு செய்துள்ளேன். என் விருப்பத்திற்கு மாறாக என்னை பாலியல் பலாத்காரம் செய்து என்னை தாய்மை அடைய செய்தும், கருவை கலைத்தும் எனக்கு மாறாத களங்கத்தையும், மன உளைச்சலையும் ஏற்படுத்திய ரகு மீதும், அவரது பெற்றோர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த புகாரில் ஜீவிதா கூறியுள்ளார்.

மேலும் ரகுவும், ஜீவிதாவும் சந்தித்த நெருக்கமான வீடியோ சிடி, செல்போன் உரையாடல்கள் மற்றும் புகைப்படங்களையும் ஆதாரங்களாக ஜீவிதா போலீசில் கொடுத்துள்ளார். இந்த புகாரின் பேரில் ஈரோடு மகளிர் போலீசார் வழக்குபதிவு செய்து ரகு மற்றும் அவரது பெற்றோரை தேடி வருகிறார்கள்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!