சமூக வலைத்தளமான முகப்புத்தகம் (facebook) உலகளாவிய ரீதியில் இன்று 30 நிமிடங்களுக்கு முடக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
முகப்புத்தகத்தில் உள்நுழைய முயற்சிக்கும் போது,
‘மன்னிக்கவும் ஏதோ தவறு நடந்துவிட்டது. இந்த பிரச்சினைக்கு விரைவாக தீர்வு காண்பதற்காக பணிபுரிகின்றோம்’ என திரையில் அவதானிக்க முடிந்தது.
தற்போது முகப்புத்தகம் முறையாக செயற்படுகின்ற போதிலும் 30 நிமிடம் முகப்புத்தகம் முடக்கப்பட்மை தொடர்பில் உத்தியோக பூர்வ தகவல் எதுவும் வெளியிடப்பட வில்லை.
















