வடக்கு மாகாண ஆளுநர் ஜீ.ஏ சந்திரசிறியின் பதவிக்காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
வடக்கு மாகாண ஆளுநரின் பதவிக்காலம் நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில் மேலும் பதவிக்காலத்தை நீடிக்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.
அதன்படி இன்றைய தினம் ஆளுநருக்கான பதவி நீடிப்புக் கடிதம் ஜனாதிபதியால் வழங்கி வைக்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளிளாகியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
















