நேற்று இணையத்தை மட்டுமல்லாமல் அமலாபாலையும் பரபரப்பாக்கியது ஒரு செய்தி. அமலாபால் விஜய் கொண்டாடிய முதலிரவுக் காட்சி வீடியோ என ஒரு செய்தி இணையத்தில் உலா வந்தது. இந்த செய்தி அமலாபாலின் காதிற்கு எட்டியுள்ளது. அவர் பதறிப்போய் அந்த செய்தியை பார்த்துள்ளார். சில விஷமிகள் அமலாபாலும் விஜய்யும் மாலத்தீவில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை ஒரு வீடியோவாக தயாரித்து. அதை அமலாபாலின் முதலிரவுக் காட்சி என இணையத்தில் வதந்தியை பரப்பிவிட்டுள்ளனர்.
தற்பொழுது அமலாபால் தன்னுடைய குடும்பத்தையே கதிகலங்க வைத்த அந்த மர்ம நபரை பொறி வைத்து தேடி வருகின்றார். இதுகுறித்து அமலாபால் நேரடியாக எந்த புகாரும் தெரிவிக்கவில்லையாம். நெருங்கிய காவல்துறை உறவினர் மூலம் விசாரிக்க சொல்லியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நடிகைகளுக்கு திருமணமாகிவிட்டால் இது போன்று வந்தந்திகளை பரப்புவது சிலருக்கு வேலையாகிவிட்டது. நம்மை யாரும் கண்டுகொள்ளமாட்டார்கள் என்ற தைரியத்தில் தான் இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் அமலாபால் மீடியாக்களுக்கு தெரியாமல் ரகசியமாக நடவடிக்கையை மேற்க்கொண்டது பாராட்டத்தக்கது.
புடிங்க சார் அவன, புடிச்சு ஜெயில்ல போடுங்க……
















