விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் சாவடைந்து விட்டார் என்று கூறியதால் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, மக்களின் மிகக் கடுமையான எதிர்ப்பையும், வெறுப்பையும் சம்பாதித்துள்ளது.
உலகத் தமிழினத்தால்
மதிக்கப்படும் ஒப்பற்ற
தலைவர் பிரபாகரன்
ஈழத் தமிழர்களால் மட்டுமல்லாது, உலகத் தமிழர்களாலும் தமது நிகரற்ற தலைவராக ஏற்றுக் கொள்ளப்பட்டவர் வே.பிரபாகரன் என்பது உலகறிந்த விடயமாகும். அவரது நேர்மையும், துணிவும், இனத்தின் மீது அவர் கொண்டிருந்த பற்றும், தன்னலமற்ற தன்மையும், ஒப்பற்ற தலைவராக அவரை மதிக்க வைத்தன. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்கள் ஒழுக்கமும், கட்டுக்கோப்பும் மிக்கவர்களாகத் திகழ்ந்தமைக்கு தலைவர் பிரபாகரனே முக்கிய காரணமாக இருந்தார்.
புலிகளின் ஆட்சிக் காலத்தில் திருட்டு, கொள்ளை, பெண்கள் மீதான வன்செயல்கள், அடாவடித் தனங்கள் ஆகியவற்றைக் காணமுடியவில்லை. போர் இடம்பெற்றுக் கொண்டிருந்ததால் மக்கள் பெரும் இடர்களுக்கு மத்தியில் வாழ்ந்தபோதிலும், பயத்தை அறியாதவர்களாக இருந்தனர். புலிகள் அவர்களுக்குப் பாதுகாப்பு அரணாக விளங்கிய மையே இதற்கான காரணமாகும். அந்தக் காலம் எப்போது வருமெனத் தமிழ் மக்கள் ஏங்கிக் கொண்டிருக்கின்றனர்.
பிரபாகரனது செயற்பாட்டுப்
பண்புகள் குறித்துப் பாராட்டும்
தென்னிலங்கைத் தரப்புக்கள்
தென்னிலங்கையில் பிரபாகரன், பயங்கரவாதி என்ற முத்திரை குத்தப்பட்டு அவ்வாறே அழைக்கப்பட்டும் வந்தார். ஆனால் இன்று நிலமை மாறிவிட்டது. பிரபாகரனைப் போன்ற சிறந்த தலைவர்கள் தெற்கிலும் உருவாக வேண்டுமெனக் கூறுமளவுக்கு அங்கு நிலமை மாறிவிட்டது. கடந்த உள்ளூராட்சித் தேர்தல் பரப்புரை மேடைகளில் இதைக் காணமுடிந்தது.
இறுதிப் போரில் பிரபாக ரனைப் படைகள் கொன்றுவிட்டதாக அரசு தீவிர பரப்புரைகளில் ஈடுபட்ட போதிலும், தமிழர்களில் பெரும்பாலோர் அதை நம்பவில்லை. அவர் உயிரோடு உள்ளார் என்றே அவர்கள் இன்னமும் நம்புகின்றனர்.
இந்த நிலையில் நல்லூரில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மேதினக் கூட்டத்தில் வைத்து தலைவர் பிரபாகரன் இறந்து விட்டார் எனவும், இனிமேல் அவருக்குப் பதிலாக கஜேந்திரகுமாரைத் தலைவராக ஏற்றுக்கொண்டு அவருக்குப் பின்னால் அணி திரள வேண்டுமெனவும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தலைவர் கூறியமை அங்கு கூடியிருந்த மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியைத் தோற்றுவித்துவிட்டது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியைச் சேர்ந்தவர்களே அந்தக் கட்சியின் தலைவரது பிரச்சினைக்குரிய அந்தக் கருத்துக் குறித்து குழப்பத்தில் ஈடுபட்டதாகவும் தெரிய வருகின்றது. பிரபாகரன் இறந்து விட்டார் எனக் கூறப்படுவதை மக்கள் ஏற்க மாட்டார்கள் என்பதையும், அவருக்கு மாற்றீடான தலைவர் எவரையும் ஏற்றுக் கொள்வதற்கு அவர்கள் தயாரில்லை என்பதையும் இந்தச் சம்பவம் தௌிவாக உணர்த்தி விட்டது.
கஜேந்திரகுமாரின் தந்தையாரான குமார் பொன்னம்பலத்துக்கு மாமனிதர் விருது வழங்கித் தலைவர் பிரபாகரன் மறுப்புறுத்தியதைத் தமிழர்கள் என்றுமே மறக்க மாட்டார்கள். இந்த நிலையில் அவர் தலைவராக இருந்த தமிழ்க் காங்கிரஸ் கட்சியினர் பிரபாகரனை அவமதிக்கும் வகையில் நடந்து கொள்கின்றமை ஏற்கத்தக்கதல்ல. தமிழ் மக்களும் இதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
பிரபாகரனுக்குப் பதிலாக
எவரும் தற்போதில்லை
தலைவர் பிரபாகரனின் இடத்தை நிரப்புவதற்குத் தகுதியுடைய தலைவரொருவர் இனிமேல்தான் பிறக்க வேண்டும். ஓர் இனத்தின் தலைமைத்துவம் என்பது பரம்பரையாக வருகின்ற ஒன்றல்ல. பிரபாகரன் சிறுவயதிலிருந்தே தனது இனத்துக்காகத் தன்னை அர்ப்பணித்துச் செயற்பட்டதால், தலைவர் பதவிக்கு உயர்ந்தார். தனது குடும்ப நலன்கள் குறித்து அவர் ஒருபோதுமே அக்கறை காட்டியதில்லை.
இளவயதிலேயே தனது தாய், தந்தை, சகோதரர்கள் ஆகியோரின் பாசத்தைத் துறந்துவிட்டு இனத்தின் விடுதலைக்காகப் போராடுவதற்குப் புறப்பட்ட அபூர்வ மனிதர் அவர். அவர் உறங்கிய மணித்துளிகள் மிகக் குறைவானவை. உணவைக்கூட அவர் நிம்மதியாக ஆற அமர இருந்து உண்ப தற்கு நேரம் இருந்த தில்லை. புலிப்போராளிகளைத் தனது பிள்ளைக ளாகக் கருதிப் பேணினார். தனது குடும்பத்துக் கென ஒரு சதத்தைக்கூட அவர் சேமித்து அறியாதவர். பொய்யும், புரட்டும், கபடநோக்கமும் இவரிடம் அறவே காணப்படவில்லை.
இந்த உலகத்தில் வாழ்கின்ற அனைத்துத் தமிழர்களும் இவரையே தமது தலைவராகப் போற்றிப் புகழ்கின்றனர். புலம் பெயர்ந்து வாழ்கின்ற தமிழர்கள் தமது மேதினப் பேரணியின் போது பிரபாகரனின் படங்களைத் தாங்கி நின்றமை அவர்கள் அவர்மீது கொண்டுள்ள ஆழ்ந்த அன்பை வௌிக்காட்டியது. எமது தலைவர் இறக்கிவில்லை, உயிரோடுதான் இருக்கின்றார் என்ற நம்பிக்கை, துன்பங்களுக்கு மத்தியிலும் ஒருவித புத்துணர்வை அவர்களிடம் ஏற்படுத்தி வருகின்றது.
இதைச் சிதைக்கும் வகையில் கஜேந்திரகுமார் தரப்பினர் நடந்து கொள்கின்றமை மக்களின் வெறுப்பைச் சம்பாதிக்கவே வழிவகுக்கும்.பிரபாகரனை யும், கஜேந்திரகுமாரையும் ஒப்பிட்டுப் பேசுவதற்குத் துணிவு வந்ததற்கான காரணங்கள் குறித்து ஆராய்ந்து பார்க்கப்படல் வேண்டும். இதற்குரிய தண்டனையைச் சம்பந்தப்பட்டவர்களுக்கு மக்களே தமது வாக்குப் பலத்தின் மூலமாக வழங்க வேண்டும்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!