தோ்தல்களின் போது முஸ்லீம் பெண்கள் புர்கா அணிந்து வாக்ளிக்க முடியாது!

muslim-womanஎதிர்வரும் தேர்தல்களில் முஸ்லிம் பெண்கள் ஹபாயாவோ,ஹிஜாபோ அணிந்து வந்து வாக்களிக்கலாம். ஆனால் முகத்தை முற்றாக மூடும் புர்கா அணிந்து வந்து வாக்களிக்க முடியாது என் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

ஊவா தேர்தல் தொடர்பில் அரசியல் கட்சிகளைத் தெளிவுபடுத்தும் கூட்டம் நேற்று கொழும்பில் நடைபெற்றபோதே அவர் இதனை வலியுறுத்தியுள்ளார்.

மட்டுமன்றி, அடையாள அட்டைகளுக்கான புகைப்படங்கள் எடுக்கும் போதும், முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிந்து காதுகளை மூடாது, காதுகளைத் திறந்தே புகைப்படம் பிடிக்க வேண்டும் எனவும் அவர் மேலும் கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags: , ,

Leave a Reply