ஐ.நா விசாரணைக் குழு முன்னிலையில் சாட்சியமளிக்கத் தயார் – கலம் மக்ரே

callum-macrae-channel-4இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகள் விசாரணைக் குழுவின் முன்னிலையில் சாட்சியமளிக்கத்தயார் என செனல்4 ஊடகத்தின் பணிப்பாளர் கலம் மக்ரே தெரிவித்துள்ளார்.

இலங்கை யுத்தக் குற்றச் செயல் விசாரணைகளில் பூரண பங்களிப்பு வழங்கத் தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கில்லிங் பீல்ட்ஸ், நோ பயர் சோன் உள்ளிட்ட பல இலங்கை யுத்தம் குறித்த ஆவணப்படங்களை மக்ரே தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையினால் நடத்தப்பட்டு வரும் விசாரணைகள் இரகசியத்தன்மையுடன் கூடியது எனவும், தேவையான நேரத்தில் உரிய ஒத்துழைப்பை வழங்க ஆயத்தமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags: , , , ,

Leave a Reply