மர்ம விமானம் என்று பட்டம் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய கடற்படை

யாழ்ப்பாணம்- பொன்னாலையில், நேற்றுமுன்தினம் நள்ளிவு சந்தேகத்துக்குரிய விமானம் ஒன்றை நோக்கி சிறிலங்கா படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர் என்று கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

எனினும், பின்னர் நடத்தப்பட்ட விசாரணைகளில், படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியது விமானம் மீது அல்ல என்பதும், சிறுவர்கள் பறக்க விட்ட பட்டம் ஒன்றின் மீதே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது என்பது தெரிய வந்துள்ளது.

மின்அலங்காரத்துடன், ரீங்கார ஒலி எழுப்பக் கூடிய பட்டத்தையே சிறுவர்கள் பறக்கவிட்டிருந்தனர்.

அந்தப் பட்டத்தை பொன்னாலையில் இருந்த சிறிலங்கா கடற்படையினர் முதலில் கண்டுள்ளனர்.

அவர்கள் யாழ்ப்பாணத்தில் இருந்த படையினரை எச்சரித்துள்ளதுடன், அதன் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!