தேசிய பாதுகாப்பு விவகாரங்களில் ஐக்கிய நாடுகள் அமைப்பு தலையீடு செய்ய முடியாது – அரசாங்கம்

Sri_Lanka_flag3இலங்கையின் தேசிய பாதுகாப்பு விவகாரங்களில் ஐக்கிய நாடுகள் அமைப்பு தலையீடு செய்ய முடியாது என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அரசியல் சாசனத்தை மீறிச் செயற்படக் கூடிய அதிகாரம் எந்தத்தரப்பிற்கும் கிடையாது என சட்ட மா அதிபர் நீதிமன்றில் சுட்டிக்காட்டியுள்ளார்.

240 பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் புகலிடக் கோரிக்கையாளர்கள் நாடு கடத்தப்படுவதனை தடுக்குமாறு கோரி நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு மீதான விசாரணைகளில் பங்கேற்ற போது சட்ட மா அதிபர் சார்பில் நீதிமன்றில் ஆஜராகிய பிரதி சொலிசுட்டர் ஜெனரல் ஜனக் டி சில்வா தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான முகவர் நிறுவனம் இலங்கையின் ஒரு சில பாதுகாப்பு விவகாரங்களில் தலையீடு செய்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுள் அகதிகளுக்கான முகவர் நிறுவனமோ அல்லது வேறும் மேற்குலக நாடுகளின் அமைப்புக்களோ அரசியல் சாசனத்தின் வரையறைகளை மீறிச் செயற்பட முடியாது என்பதனை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பு மேன்முறையீட்டு நீதவான் உபாலி அபேரட்ன முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

வழக்கு விசாரணைகள் பூர்த்தியாகியுள்ளதாகவும் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 1ம் திகதி தீர்ப்பை அறிவிக்க உள்ளதாகவும் நீதவான் தெரிவித்துள்ளார்.

இலங்கை குடிவரவு குடியகழ்வு சட்டங்களின் அடிப்படையில் எந்தவொரு வெளிநாட்டுப் பிரஜையும் உரிய கடவுச் சீட்டு மற்றும் வீசா இன்றி நாட்டில் தங்கியிருக்க முடியாது என பிரதி சொலிசுட்டர் ஜெனரல் ஜனக் டி சில்வா தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் புகலிடக் கோரிக்கையாளர்கள் நாடு கடத்தப்படுவதற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையுத்தரவினை நீக்குமாறு அவர் கோரியுள்ளார்.

இதேவேளை, மனித உரிமை ஆணைக்குழுவின் விசாரணகைள் பூர்த்தியாகும் வரையில் புகலிடக் கோரிக்கையாளர்கள் நாடு கடத்தப்படக் கூடாது என புகலிடக் கோரிக்கையாளர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் கோரியுள்ளனர்.

Tags: ,

Leave a Reply