வாத்து திருடிய சிறுவர்களுக்கு சீன கிராமத்தினர் கொடுத்த நூதன தண்டனை. காவல்துறை கண்டனம்

duck-theifs-china-villageசீனாவில் உள்ள கிராமத்தில் உள்ள குளத்தில் வாத்துக்களை திருடி விற்று வந்த இரண்டு சிறுவர்களை அந்த கிராமத்தினர் பிடித்து நூதன தண்டனை கொடுத்துள்ளனர்.

சீனாவில் உள்ள southern region of Guangxi என்ற கிராமத்தில் அடிக்கடி குளத்தில் இருந்த வாத்துக்கள் திருடு போவதாக வந்த தகவலை அடுத்து அங்கு காவலுக்கு ஆள் போடப்பட்டது. இதில் 14வயது சிறுவர்கள் இரண்டு பேர் வாத்துக்களை திருடியதை கையும் களவுமாக பிடித்த கிராமத்தினர் அவர்களுடைய வாயில் இறந்த வாத்துக்களை பிடிக்க செய்து இரண்டு மணி நேரம் முழங்கால் போட்டு உட்காரும் தண்டனை கொடுத்தனர். மேலும் இரண்டு வாத்துக்களை அவர்களுடைய கழுத்திலும் தொங்கவிட்டனர்.

இந்த சிறுவர்கள் வாத்துக்களை மட்டுமின்றி அந்த பகுதியில் உள்ள சிறு கடைகளில் சிகரெட் மற்றும் குளிர்பானங்களையும் திருடியுள்ளனர். மேலும் அந்த கிராமத்தின் தலைவர் Yong Ku அவர்கள் இதுகுறித்து கூறியதாவது, ‘இந்த இரண்டு சிறுவர்களும் அடிக்கடி சிறுசிறு திருட்டுக்களை செய்துவந்தனர். அவர்களுக்கு நிறைய முறை எச்சரிக்கை விடுத்தும், அறிவுரை கூறியும் அவர்கள் திருந்துவதாக தெரியவில்லை. அதனால் அவர்களுக்கு நூதன தண்டனை அளித்துள்ளோம் என்று கூறினார்.

ஆனால் அந்த சிறுவர்களின் பெற்றோர்கள் காவல்துறையினர்களிடம் கிராமத்து தலைவர் மீது புகார் கொடுத்ததால் காவல்துறையினர் நேரில் வந்து சிறுவர்களை மீட்டதோடு, கிராமத்தலைவரையும் கண்டித்துள்ளனர். எந்த திருட்டு நடந்தாலும் அதை காவல்துறையினர்களிடம் புகார் அளிக்க வேண்டுமே தவிர அவர்களே சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு தண்டனை வழங்கக்கூடாது என்று எச்சரிக்கை விடுத்தனர். இதனால் அந்த கிராமப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags: , ,

Leave a Reply