எந்த நிபந்தனையுமின்றி தி.மு.க. கூட்டணியில் தொடர்வோம் – தொல் திருமாவளவன்

2019 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் எந்த நிபந்தனையுமின்றி தி. மு. க. கூட்டணியில் தொடர்வோம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது,

‘நாங்கள் தற்போது தி.மு.க. கூட்டணியில் இருக்கிறோம். 2019 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் இந்த கூட்டணியில் அங்கம் வகிப்போம். 2016 சட்டபேரவை தேர்தல் முடிந்தவுடன் நாங்கள் மாநாடு நடத்தி மதசார்பற்ற இயக்கங்களை வலுப்படுத்தும் வகையில் செயல்படவேண்டும் என்று தீர்மானித்தோம்.

நாங்கள் அதிமுக மற்றும் திமுக கட்சிகளை விமர்சித்திருக்கிறோம். அது சட்டமன்ற தேர்தலை மையமாக வைத்து நடந்தது. இப்போது மதசார்பின்மைக்கும், சாதி மத ரீதியிலான அமைப்புகளுக்கும் இடையே போட்டி நடக்கிறது.

கடந்த பதினேழு ஆண்டுகளில் நாங்கள் அதிமுகவுடன் ஆறு மாதம் மட்டுமே கூட்டணியில் இருந்தோம். மற்ற காலங்களில் எல்லாம் திமுகவுடன் தான் கூட்டணியில் இருந்தோம். 2019 தேர்தல் தேசிய அளவிலான விவகாரம் சம்பந்தப்பட்டது. ஆகையால் நாங்கள் இந்த தேர்தலில் எந்த ஒரு நிபந்தனையும் இல்லாமல் திமுக கூட்டணியில் இருப்போம்.’ என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!