காணமற்போனோர் தொடர்பான ஜனாதிவிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் முடிவடையும் வரையிலும் பலவந்தமாக காணமற்போகச் செய்யப்பட்டோர் தொடர்பான ஐ.நா குழுவிற்க்கு இலங்கைக்குள் நுழைவதற்க்கான அனுமதியை வழங்கப் போவதில்லை என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.
ஐ.நா மனித உரிமை சபையின 27 வது அமர்வில் சமர்ப்பித்துள்ள அறிக்கையிலேயெ இவ்வாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஜனபதிபதி ஆணைக்குழுவின் விசாரணை முடிவுகளிற்க்கும், ஐ.நா குழுவின் தகவல்களுக்கும் தொடர்பு காணப்படாலாம் என கருதுவதாகவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
எனினும் ஐ.நாவின் குழுவுடன் தொடர்ந்தும் பேச்சுக்களில் ஈடுபடப்போவதாகவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
















