இந்தியாவில் கோர விபத்து : 43 பேர் பலி, 35 பேர் காயம்

இந்தியாவின், இமாச்சல் பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 43 பேர் உயிரிழந்ததுடன் மேலும் 35 பேர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

நேற்றைய தினம் இமாசல பிரதேசத்தின் சிம்லாவிலிருந்து சவேராகாட் என்ற இடத்திற்கு சென்ற தனியர் பஸ்ஸொன்றே பள்ளத்தாக்கிள் வீழ்ந்து இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தின்போது குறித்த பஸ்ஸில் சுமார் 78 முதல் 80 பேர் பஸ்ஸில் இருந்தாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த கோர விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 25 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்பட்டபோதிலும் தற்போதும் உயிரிழப்பு 44 ஆக உயர்வடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.

மேலும் படுகாயமடைந்தவர்கள் படையினரால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில் இவர்களுள் பலரது நிலைமைகள் கவலைக்கிடமாகவுள்ளதாக வைத்தியாசலை வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

அதனால் உயிரிழப்பு தொகை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இந் நிலையில் விபத்தில் உயிர் இழந்தவர்களின் குடும்பங்களுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!