தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்த நடிகை ஸ்வேதா பாசு கடந்த வாரம் விபச்சார வழக்கு ஒன்றில் சிக்கி தற்போது ஐதராபாத்தில் உள்ள மகளிர் காப்பகத்தில் உள்ளார். குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆன ஸ்வேதா பாசு தேசிய விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அவர் படவாய்ப்பு இல்லாததால், தடம் மாறி விபச்சாரத்திற்கு தள்ளப்பட்டதாக கூறியிருந்தார்.
இந்நிலையில் அவருக்கு ஆதரவாக தெலுங்கு, மற்றும் தமிழ் நடிகைகள் சிலர் ஆதரவு கொடுத்தனர். பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே, அவர் தன்னுடைய உடம்பை விற்றால்தான் தனது குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்ற நிலையிருந்தால் அவர் செய்ததில் தவறில்லை என்று கருத்து கூறியிருந்தார். மேலும் குஷ்பு உள்பட ஒருசில நடிகைகள் நடிகை விபச்சாரத்தில் சிக்கியதை மட்டும் வெளிச்சம் போட்டும் காட்டும் ஊடகங்கள் அன்றைய தினம் ஸ்வேதா பாசுவுடன் இருந்த மும்பை தொழிலதிபர்கள் குறித்து செய்தி வெளியிடாதது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த பிரச்சனை பூதாகரமானதால் மும்பை தொழிலதிபர்களையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த ஐதராபாத் போலீஸ் முடிவு செய்துள்ளனர். மேலும் போலீஸார் மும்பை தொழிலதிபர்களின் பெயர்களை தெரிவிக்காவிட்டால், தன்னை பயன்படுத்திய அனைத்து முக்கிய வி.ஐ.பிக்களின் பெயர்களையும் வெளியிடுவேன் என ஸ்வேதா பாசு மிரட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
















