ஜெர்மனி தலைநகர் பெர்லின் நகரில் உள்ள ஒரு ரயில் நிலையத்தின் பிளாட்பாரத்தில் பயணிகள் நடந்து செல்வதையும் பொருட்படுத்தாமல் ஒரு காதல் ஜோடி செக்ஸ் உறவு கொண்டிருந்த விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இன்று அதிகாலையில் ஜெர்மனியில் உள்ள பெர்லின் நகரின் Schoenleinstrasse என்ற சுரங்க ரயில் நிலையத்தின் பிளாட்பாரத்தில் ஒரு இளம் காதல் ஜோடி நின்று கொண்டே செக்ஸ் உறவு கொண்டிருந்தனர். அந்த காட்சியை பார்த்து பிளாட்பாரத்தில் நடந்து சென்றவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். பயணிகளில் ஒருவர் அந்த ஜோடியை புகைப்படம் எடுத்தார். அவர் புகைப்படம் எடுத்ததை கவனித்த அந்த ஜோடி கையை தூக்கி போஸ் கொடுக்கவும் செய்தனர்.
இந்த புகைப்படம் இன்று காலை முதல் இண்டர்நெட்டில் படுவேகமாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைத்தளங்களிலும் இந்த புகைப்படம் மிக வேகமாக பரவி வருகிறது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீஸார் அந்த காதல் ஜோடியை தேடி வருகின்றனர். அதிகாலை நேரம் என்பதால் பயணிகள் கூட்டம் வெகு குறைவாக இருந்ததால் அந்த காதல் ஜோடியினர் உறவு கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
















