கோத்தாவை வேட்பாளராக ஓகஸ்ட் 11இல் அறிவிப்பார் மகிந்த – பசில் தகவல்

தமது கட்சியின் அதிபர் வேட்பாளரை எதிர்வரும் ஓகஸ்ட் 11ஆம் நாள், எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச அதிகாரபூர்வமாக அறிவிப்பார் என்று சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நிறுவுநரான பசில் ராஜபக்ச தெரிவித்தார்.

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம் ஒன்றிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

”பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவே போட்டியிடுவார்.

ஓகஸ்ட் 11ஆம் நாள், நடைபெறவுள்ள கூட்டத்தில், பொதுஜன பெரமுனவின் தலைவராக மகிந்த ராஜபக்ச பொறுப்பேற்றுக் கொள்வார்.

அதிபர் தேர்தலில் வெற்றியைப் பெறுவதற்கான திட்டம் குறித்து பின்னர் வெளிப்படுத்தப்படும். அனைவரும் வெற்றிக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!