தமிழ் மக்களின் வாக்குகள் கோத்தாவுக்கு கிடைக்காது!

தமிழ் மக்களின் வாக்குகள் என்றைக்குமே கோத்தாபய ராஜபக்சவுக்கு கிடைக்காது என, ஈபிஆர்எல்எவ் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

தற்போது நாட்டில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பான விடயம் பேசு பொருளாக உள்ளது. சில கட்சிகள் தங்களின் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தியுள்ளனர். இந்நிலையில் பெரமுன கட்சிகள் சார்பாக முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்ஷ அறிவிக்கப்பட்டுள்ளார். ஆனால் தமிழ் மக்களின் வாக்குகள் என்றைக்குமே கோத்தாவுக்கு கிடைக்காது. ஏனெனில் அவர் போர்க் குற்றச்சாட்டுக்கு உள்ளகியிருப்பவர். அதற்கும் மேலதிகமாக அவர் சட்டங்களை மதிக்கும் நபர் இல்லை. இராணுவத்தினர் வசம் உள்ள காணிகளை விடுவிப்பதில் சாதக தன்மை அற்றவர். இவ்வாறான ஒருவரை தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ள விரும்ப மாட்டார்கள் என மேலும் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!