மலையக மக்களிடம் வாக்கு கேட்டு நாம் வரப்போவதில்லை : சுரேஷ்

Suresh-Premachandran3தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு அடக்­கப்­பட்ட மக்­களின் பிர­தி­நி­தி­க­ளாக செயற்­ப­டு­ப­வர்கள். பாரிய அழி­வுகள் ஏற்­பட்ட பின்பும் ஆளும் கட்­சியில் இருக்­ கின்றோம் என்­ப­தற்­காக ஏனை­யோரில் குற்றம் காணு­வதில் எந்­த­வித அர்த்­தமும் இல்லை. மலை­ய­கத்­திற்­கான எங்­க­ளு­டையபயணம் என்­பது எந்­த­வித அர­சியல் நோக்கம் கொண்­ட­து­மல்ல. மலை­யக மக்­க­ளிடம் நாங்கள் வாக்கு கேட்டு வரப்­போ­வ­து­மில்லை என தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பின் பேச்­சா­ளரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான சுரேஸ்­பி­ரே­மச்­சந்­திரன் தெரி­வித்­துள்ளார்.

அத்­துடன் பல்­வே­று­பட்ட கால கட்­டங்­களில் ஏற்­பட்ட கல­வ­ரங்­களின் கார­ண­மாக இடம்­பெ­யர்ந்து வடக்கு கிழக்கில் பல்­லா­யி­ரக்­க­ணக்­கான மலை­யக மக்கள் குடி­யே­றி­யுள்­ளனர். பாதிக்­கப்­பட்­ட­வர்­களில் அவர்­க­ளு­டைய உற­வு­களும் இருப்­பார்கள் என்­பதும்இ அவர்கள் தொடர்­பாக அக்­க­றைப்­பட வேண்­டிய கட­மைப்­பாடு அம்­மக்­களால் தொிவு செய்­யப்­பட்ட எமக்கு இருக்­கின்­றது. சௌமி­ய­மூாத்தி தொண்­டமான் மலைய தமிழ் மக்­க­ளுக்கு மாத்­தி­ர­மல்­லாமல் வட, கிழக்கு தமிழ் மக்­க­ளுக்கும் தலை­வ­ராக இருந்தார் என்­ப­தையும் அவ­ரது பேர­னாக இருக்­ககக் கூடிய செந்தில் தொண்­டமான் தெரிந்து கொள்­ள­வேண்டும் என சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

மண்­ச­ரிவு அனர்த்­துக்கு உள்­ளான பதுளை கொஸ்­லந்­தைக்கு பகு­திக்கு தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பு மேற்­கொண்ட விஜயம் தொடர்­பான விளக்கம் மற்றும் ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்­டமான் வௌியிட்­டுள்ள கருத்­துக்­க­ளுக்கு பதி­ல­ளிக்கும் வகையில் வௌியிட்­டுள்ள ஊடக அறிக்­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­துள்ளார்.

அவ்­வ­றிக்­கையில் மேலும் தெரி­வித்­தி­ருப்­ப­தா­வது.

தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் பதுளை கொஸ்­லந்­தைக்கு விஜயம் செய்­த­தென்­பதுஇ இயற்கை அனர்த்­தத்­தினால் பாரி­ய­ளவில் பாதிக்­கப்­பட்டு தமது உற­வுகள்இ உட­மை­களை இழந்த மக்­க­ளுக்கு வட கிழக்கு தமிழ் மக்­களின் அனு­தா­பங்­க­ளையும்இ அவர்­க­ளது துன்­பங்­களில் நாங்­களும் பங்­கெ­டுக்­கின்றோம் என்­ப­தையும் தொிவிப்­பதே எமது நோக்­க­மாக இருந்­தது.

பல்­வே­று­பட்ட கால கட்­டங்­களில் ஏற்­பட்ட கல­வ­ரங்­களின் கார­ண­மாக இடம்­பெ­யர்ந்து வந்து வடக்கு கிழக்கில் குடி­யே­றிய பல்­லா­யி­ரக்­க­ணக்­கான மலை­யக மக்கள் கிளி­நொச்சிஇ வவு­னியாஇ முல்­லைத்­தீவு மற்றும் கிழக்கு மாகா­ணத்தில் வசிக்­கின்­றார்கள். பாதிக்­கப்­பட்­ட­வர்­களில் அவர்­க­ளு­டைய உற­வு­களும் இருப்­பார்கள் என்­பதும்இ அவர்கள் தொடர்­பாக அக்­க­றைப்­பட வேண்­டிய கட­மைப்­பாடு அம்­மக்­களால் தொிவு செய்­யப்­பட்ட எமக்கு இருக்­கின்­றது என்­ப­தையும் செந்தில் தொண்­டமான் அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

2005 ஆம் ஆண்­டிலும், 2011 ஆம் ஆண்­டிலும் மண்­ச­ரி­வுகள் ஏற்­படக் கூடிய அபா­யங்கள் இருக்­கின்­றது என்­பதை இலங்கை அர­சாங்கம் தொிவித்­த­தாக இலங்கை தொழி­லாளர் காங்­கி­ரசே தொிவித்­துள்­ளது. அப்­படி கூறப்­பட்­டி­ருப்பின் ஊவா மாகாண அமைச்­சா­ராக இருக்கும் செந்தில் தொண்­டமான் சரி, ஏனைய அமைச்­சர்­களும் சரி இந்த மக்கள் தொடர்­பாக என்ன நட­வ­டிக்கை இது­வரை எடுத்­தி­ருக்­கின்­றீர்கள். பாரிய அழி­வுகள் ஏற்­பட்ட பின்பும் ஆளும் கட்­சியில் இருக்­கின்றோம் என்­ப­தற்­காக ஏனை­யோரில் குற்றம் காணு­வதில் எந்­த­வித அர்த்­தமும் இல்லை. அது மாத்­தி­ர­மல்ல மலை­ய­கத்­திற்­கான எங்­க­ளு­டைய பயணம் என்­பது எந்­த­வித அர­சியல் நோக்கம் கொண்­ட­து­மல்ல. மலை­யக மக்­க­ளிடம் நாங்கள் வாக்கு கேட்டு வரப்­போ­வ­து­மில்லை.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பென்­பது அடக்­கப்­பட்ட மக்­களின் பிர­தி­நி­தி­க­ளாக செயற்­ப­டு­ப­வர்கள். ஆகவே அடக்­கப்­பட்ட, பாதிக்­கப்­பட்ட மக்கள் மலை­ய­கத்தில் இருந்­தாலும்இ வேறு எங்­கி­ருந்­தாலும் குரல் கொடுக்க வேண்­டி­யது எங்கள் கடமை. ஆகவே அவ்­வாறு பேசக் கூடா­தென்று யாரும் எமக்கு தடை­யுத்­த­ரவு போட­மு­டி­யாது. செந்தில் தொண்­டமான் கண்­டனம் தொிவிக்கும் அள­விற்கு தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு ஒன்றும் பிழை­யாக நடக்­க­வில்லை. ஏற்­க­னவே பல்­லா­யி­ரக்­க­ணக்­கான மலை­யக தமிழ் மக்­க­ளுக்கு காணிகள் வழங்கி அவர்கள் நிரந்­தர குடி­க­ளாக இருப்­பதை உறு­திப்­ப­டுத்­தி­ய­வர்கள் நாங்கள்.

யுத்­தத்­தினால் நாங்கள் பாதிக்­கப்­பட்­டி­ருக்­கின்றோம் என்­பதும், எமது மக்­களின் காணி­களை இரா­ணுவம் பறித்­தெ­டுக்­கின்­றது என்­பது உண்மை. ஆனால் அவற்றை நாங்கள் பெற்றுக் கொள்ள இறு­தி­வரை போரா­டுவோம் என்­ப­தையும், மலை­ய­கத்தில் பாதிக்­கப்­பட்ட மக்களுக்கு ஏற்ற மாற்றுத் திட்டங்களை அரசு முன்னெடுக்காவிட்டால். அவர்களுக்கு வட கிழக்கில் இடம் இருக்கின்றது என்பதையும் மீண்டும் வலியுறுத்தி கூற விரும்புகின்றேன்.

தலைவர் சௌமியமூாத்தி தொண்டமான் மலைய தமிழ் மக்களுக்கு மாத்திரமல்லாமல் வட, கிழக்கு தமிழ் மக்களுக்கும் அவர் தலைவராக இருந்தார் என்பதையும் அவரது பேரனாக இருக்ககக் கூடிய செந்தில் தொண்டமான் அவர்கள் தொிந்து கொள்ள வேண்டும் என்பதுடன், அவரது பாதையில் பயணிப்பார் எனவும் எதிர்பார்க்கிறோம்.

Tags: , ,

Leave a Reply