மீரியபெத்த பெருந்தோட்டத்தில் இடம் பெற்ற பாரிய மண்சரிவில் பெரிதும் பாதிக்கப்பட்டுஇ பூனாகலை தமிழ் மகா வித்தியாலயத்தில் தஞ்சம் அடைந்திருப்பவர்கள். வட மாகாண சபை முதல்வர் சி.வி.விக்கி னேஸ்வரனிடம் தமக்கு வளமான வாழ்வினை ஏற்படுத்துவதற்கு துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி மன்றாடிக் கேட்டுக் கொண்டனர்.
தஞ்சம் அடைந்திருக்கும் எம்மை எந்த உதவிகளும் செய்யாமல் இங்கிருந்து வெளியேற்றி விடுவார்கள் போல் தெரிகின்றது. நாம் நடுத்தெருவிற்கு தள்ளப்பட்டு விடுவோமோ என்ற அச்சம் எம்மிடம் இருந்து வருகின்றது. நாம் படும் கஷ்டம் போன்று உயிருடன் இருந்து வரும் எமது பிள்ளைகளும் எம்மைப் போன்று கஷ்டப்படக்கூடாது. அதற்கான ஒழுங்குகளை நாங்கள் மேற்கொள்ள வேண்டியிருக்கிறது.
நீங்கள் எம்மை பார்க்க வருவதை கேள்வியுற்ற நாம் உங்களை எதிர்பார்த்து காத்திருந்தோம். ஏற்கனவே நாம் ஏமாற்றப்பட்டுவிட்டோம். இனிமேலும் அந்நிலை எமக்கு ஏற்படக்கூடாது.
இம்முறையும் நாம் ஏமாற்றப்பட்டு விடுவோமானால் கிருமிநாசினிகளை அருந்தித் தற்கொலை செய்து கொள்வதைவிட வேறு வழி எமக்குத் தெரியவில்லை.
நாம் இங்கிருந்து வெளியேறும் போது சொந்தக் காணியில் சொந்த வீட்டில் வாழும் நிலையினை ஏற்படுத்திக் கொடுக்க உங்களாலான உதவிகளை எமக்கு நல்கும் படி கேட்டுக் கொள்கின்றோம் என்று முகாமில் தங்கியுள்ள எம்.சின்னையாஇ என்.தங்கராஜாஇவி.ஆண்டிஇ கே.தெய்வானை உள்ளிட்ட பலர் முதல்வரின் கரங்களை பற்றி மன்றாடிக் கேட்டு கொண்டனர்.
இதைக் கேட்ட வடக்கு முதல்வர் பெரும் வேதனையுற்றதை அவதானிக்க கூடியதாக இருந்தது. அவர் அருகில் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோகணேசனும் கவலை தோய்ந்த நிலையில் காணப்பட்டார்.
வடக்கு முதல்வர் தமதுரையில் ;
இங்கிருந்து மக்கள் வெளியேறும் போது அவர்களின் விருப்பின்படி சொந்த வீட்டில் வாழக்கூடிய சூழலில் வெளியேற வேண்டும். அதனையே நாமும் விரும்புகின்றோம்.
200 வருட கால வரலாற்றைக் கொண்ட இம் மக்கள் தொடர்ந்தும் கண்ணீரும் கம்பலையுமாக இருந்து வருவது கண்டு வேதனையடைகின்றேன். இந்நாட்டை வளபப்படுத்திய மலையக மக்கள் வளமான வாழ்வினை வாழ வேண்டும். அதற்காக இந்நாட்டின் அரசை வலியுறுத்தி கூடிய அழுத்தங்களை கொடுப்போம்.
இம் மக்களின் அவலம் தற்போது இந்நாட்டின் மூலை முடுக்குகள் மட்டுமின்றி சர்வதேசத்திற்கே தெரிந்துள்ளது. அதனாலேயே சர்வதேச அரசுகள் இம் மக்களின் மேம்பாட்டிற்கு பூரண ஒத்துழைப்புக்களையும் நிதி உதவிகளையும் வழங்க முன்வந்துள்ளன.
அத்துடன் எமது வட மாகாண சபையும் பாதிக்கப்பட்டிருக்கும் மலையக மக்களின் துயரில் பங்கு கொள்கின்றது. மலையக மக்கள் தனித்துவிடப்படவில்லை. இம் மக்களுடன் நாமும் இருக்கின்றோம்.
லயன் வாழ்க்கை முறை இனியும் வேண்டாம். சொந்த காணியில் சொந்த வீட்டில் அம் மக்கள் அனைத்து வசதிகளுடன் வாழ வேண்டும். எம்மால் முடிந்த உதவிகளை இன்று வழங்குகின்றோம். தொடர்ந்தும் உதவிகளை வழங்க காத்திருக்கின்றோம் என்றார்.
அடுத்து மனோகணேசன் பேசுகையில்,
மீரியபெத்த சம்பவம் முழு மலையகத்திற்கும் விடிவினை ஏற்படுத்தக்கூடியதாகியுள்ளது. இவ்விடிவிற்கு மீரியபெத்த சம்பவத்தில் இறந்தவர்கள் அனைவரும் மலையகத் தியாகிகளாகிவிட்டனர்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலங்கை அரசு பெரிதாக எதையும் செய்ய தேவையில்லை. சர்வதேசத்திலிருந்து கிடைக்கும் நிதியே அளவிற்கு மிஞ்சியுள்ளது.
எம் மக்களுக்கு சொந்தக் காணிஇ சொந்தவீடு வழங்குவதில் இனி எத்தாமதங்களும் இல்லை. எமது மக்களின் அவலம் புலம் பெயர்ந்தவர்களுக்கும் சர்வதேசத்திற்கும் தெரிவதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளேன். அதன் ஆரம்பக் கட்டம் வடக்கு முதல்வர் மற்றும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரை இங்கு கூட்டிவந்ததாகும் என்றார்.
















