எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு பொதுவேட்பாளரை தெரிந்தெடுக்கும் பணியில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
இந்த தகவலை கொழும்பின் ஊடகத் தகவல்கள் உறுதிசெய்துள்ளன.
வெளிநாட்டில் இருந்து அண்மையில் நாடு திரும்பிய சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, இந்த பணிகளில் ஈடுபட்டு வருவதை அவரை சார்ந்த தரப்புக்களும் உறுதிசெய்துள்ளன.
எனினும் அவர் பொதுவேட்பாளராக போட்டியிடுவாரா? என்பது தெரியவரவில்லை.
இந்தநிலையில் எதி;ர்க்கட்சிகளும் பொது வேட்பாளர் ஒருவரை தெரிந்தெடுக்கும் நடவடிக்கைகளில் முனைப்புடன் செயற்பட்டு வருகின்றன.
















