2003க்கு முன் தயாரிக்கப்பட்ட வாகனங்களுக்கு மலைப்பாதையில் பயணிக்க அனுமதி இல்லை!

திருப்பதி மலைப்பாதையில் 2003ம் ஆண்டுக்கு முன்பு தயாரிக்கப்பட்ட வாகனங்களுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் பேட்டரி வாகனங்களை இயக்க தேவஸ்தான நிர்வாகம் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதற்கான சோதனை ஓட்டங்களும் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் கடந்த 2003 ஆம் ஆண்டுக்கு முன்பு தயாரிக்கப்பட்ட வாகனங்களை மலைப்பாதையில் அனுமதிக்க முடியாது என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

அத்தகைய வாகனங்கள் மீண்டும் திருப்பி அனுப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதை தவிர்க்கவும், சுற்றுச்சூழல் பாதிக்கப்படாமலும் இருக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!