யாழ். குடாநாட்டில் உள்ள ஐஸ்கிறீம் மற்றும் யூஸ் உற்பத்தி நிலையங்கள் மீது மாகாண சபை அதிகாரிகள் எடுத்த நடவடிக்கை குறித்து விசாரணை நடத்தப்படவேண்டும் என ஆளும் கட்சி உறுப்பினர்கள் நேற்று வடக்கு மாகாண சபையில் வலியுறுத்தினர்.
இந்த நடவடிக்கையின் பின்னணியில் அரசியல் உள்நோக்கங்கள் இருக்கின்றன என்றும் அவங்கள் குற்றஞ்சாட்டினர். எனவே உண்மை கண்டறியப்பட வேண்டும் என்று அவர்கள் போர்க்கொடி தூக்கினர்.
















