மைத்திரியும் உள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்
ரணிலின் மனைவி மைத்திரியையும் ஜனாதிபதி பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவையும் முன்னிறுத்தி இந்தக் கருத்தை அவர் வெளியிட்டுள்ளார்.
அலரி மாளிகையில் நேற்று இடம்பெற்ற அரச ஆயுர்வேத வைத்தியர்களுக்கான போசனம் வழங்கல் நிகழ்வில் ஜனாதிபதி இந்தக்கருத்தை வெளியிட்டார்.
ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர் ஒருவரை தெரிவு செய்ய முடியாத நிலையிலேயே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளரை அந்தக் கட்சி தெரிவு செய்துள்ளதாக மஹிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
இது திஸ்ஸ அத்தநாயக்க, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு வந்து தேர்தலில் போட்டியிடுவதை போன்றது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தநிலையில் மைத்திரிபால சிறிசேன, 2010ல் சரத் பொன்சேகா சென்ற நிலைமைக்கு செல்வார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிலர் தற்போது மக்கள் முன்வந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தொடர்பில் முதலைக் கண்ணீர் வடிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்
















