ஜனாதிபதியாகி 100 நாட்களுக்குள் அதிகாரத்தை வழங்கினால், அகில இலங்கை சமாதான
நீதவானின் அதிகாரம் தான் அவருக்கு எஞ்சும் என அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.
இன்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இதேவேளை, அரசாங்கத்திலிருந்து இதன் பிறகு எவரும் வெளியேற மாட்டார்கள் என்பதை தான் உறுதியுடன் தெரிவித்துக் கொள்வதாக அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி அதே ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையில் கூறினார்.
















