பிரித்தானியாவில் கருப்பை இன்றி தாயாக முடியாத மகளுக்கு அவரது தாய் தனது கருப்பையை தானமாக கொடுத்துள்ளார்.
பிரித்தானியாவில் குழந்தை பெற முடியாத பெண் ஒருவர் தாயின் கருவை பெற்று அறுவை சிகிச்சை மூலம் அழகான குழந்தை ஒன்றினை பெற்றெடுத்து ஆரோக்கியமாக இருக்கிறார்.
இதேபோல் மற்றொரு பெண்ணும் தனது தாயிடம் இருந்து கருப்பையை தானமாக பெற்று தாயாகியுள்ளார்.
இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், பிரித்தானியாவில் சுமார் 15000பெண்கள் கருப்பை பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பிறக்கும் போதே கருப்பை இன்றியோ, அல்லது நோய் பாதிப்பினால் கருப்பையை அகற்றியோ விடுகின்றனர் என்றும் இந்த கருப்பை மாற்று அறுவை சிகிச்சையானது இதுபோன்ற பெண்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக இருக்கிறது எனவும் தெரிவித்துள்ளனர்.
















