சமல் ராஜபக்சவும் போட்டியிடவில்லை

சிறிலங்கா சுதந்திர பொதுஜன கூட்டணியின் சார்பில் போட்டியிடுவதற்காக கட்டுப்பணம் செலுத்திய முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்சவும் வேட்புமனுத் தாக்கல் செய்யவில்லை.

கோத்தாபய ராஜபக்சவின் வேட்புமனு ஏற்றுக் கொள்ளப்படாத நிலை ஏற்பட்டால் மாற்று ஏற்பாடாக, போட்டியிடவதற்காக சமல் ராஜபக்ச கடந்த வெள்ளிக்கிழமை கட்டுப்பணம் செலுத்தியிருந்தார்.

மேன்முறையீட்டு நீதிமன்றத் தீர்ப்பை அடுத்து, கோத்தாபய ராஜபக்சவுக்கான நெருக்கடி தீர்ந்திருந்தது.

எனினும், அவருக்கு சட்ட நெருக்கடிகள் ஏற்படக் கூடும் என்பதால், சமல் ராஜபக்சவும் வேட்புமனு தாக்கல் செய்வார் என்று கூறப்பட்டது.

இருந்த போதிலும் இன்று சமல் ராஜபக்ச தனது வேட்புமனுவை தாக்கல் செய்யவில்லை.

கோத்தாபய ராஜபக்சவுடன் அவர் ஒரே வாகனத்தில் தேர்தல்கள் செயலகத்துக்கு வருகை தந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமல் ராஜபக்ச, குமார வெல்கம உள்ளிட்ட மூவர், தாம் போட்டியிடவில்லை என தேர்தல்கள் ஆணையாளருக்கு முன்னரே தெரியப்படுத்தியுள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!