தண்ணீர் திருடிய குற்றவாளி மீது வழக்கு பதிவு…!

போதிய தண்ணீர் இல்லாததால் கோடைகாலத்தில் நமது சென்னை தவித்த தவிப்பை இந்த உலகமே பார்த்து பரிதாபம் கொண்டது. இந்தநிலையில் தனது கிணறுகளில் இருந்து தண்ணீரை திருடி விட்டார்கள் என, மும்பையை சேர்ந்த ஒருவர் பொலிஸில் புகார் கொடுத்துள்ளார்.

தெற்கு மும்பையை சேர்ந்த சுரேஷ்குமார் தோகா என்பவர் 2006 முதல் 2017 வரை சட்டவிரோதமாக கிணறுகள் அமைத்து சுமார் 73.18 கோடி ரூபாய் மதிப்புள்ள தண்ணீரை திருடிவிட்டதாக, திரிபுர பிரசாத் பாண்ட்யா என்பவர் மீது புகார் அளித்துள்ளார். இதற்காக சட்டவிரோத மீட்டர்களை பாண்ட்யா பயன்படுத்தி இருப்பதாகவும், இதுகுறித்த தகவல்களை தகவல் அறியும் உரிமைச்சட்டம் வழியாக சுரேஷ்குமார் பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக திரிபுரபிரசாத் பாண்ட்யா, அவரது மகன் பிரகாஷ் திரிபுரபிரசாத் பாண்ட்யா, அவரது உறவினர் மனோஜ் பாண்ட்யா மற்றும் டேங்கர் ஆபரேட்டர்கள் அருண் மிஸ்ரா, ஷ்ரவன் மிஸ்ரா, டிராஜ் மிஸ்ரா ஆகிய 6 பேர் மீதும் தற்போது 2 பிரிவுகளின் கீழ் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!