ஜனாதிபதியின் தெரிவு தமிழ், முஸ்லிம் வாக்குகளிலேயே தங்கியுள்ளது – ஓர் ஆய்வு

இம்­முறை ஜனாதி­பதித் தேர்­தலில் 35 பேர் போட்­டி­யி­டு­கின்­றனர். ஆயினும் மூன்று பிர­தான கட்­சி­க­ளான ஐக்­கிய தேசியக் கட்சி, ஸ்ரீ லங்கா பொது­ஜன பெர­முன மற்றும் மக்கள் விடு­தலை முன்­னணி ஆகிய மூன்று கட்­சி­களின் சார்பில் போட்டியிடும் ஜனாதி­பதி அபேட்­ச­கர்­களில் ஒரு­வரே ஜனாதி­ப­தி­யாகத் தெரிவு செய்­யப்­ப­டுவார்.

நான் சென்ற வாரம் எழு­திய கட்­டு­ரையில் ஜனாதி­பதி தேர்­தலில் எவ்­வாறு வாக்­க­ளிக்க வேண்டும் என்றும் வெற்றி பெறு­வதை எவ்­வாறு தீர்­மா­னிப்­பது என்­ப­தையும் தெளி­வாகக் கூறி­யி­ருந்தேன். ஆகவே மீண்டும் அதனைக் குறிப்­பிட வேண்­டிய தில்லை என நினைக்­கி­றேன. அக்­கட்­டு­ரையைப் படித்­த­வர்கள் முத­லா­வது சுற்று வட்டம் என்றால் என்ன? என்­ப­தையும் முத­லா­வது சுற்­று­வட்­டத்தில் 50% வாக்­கு­களைப் பெறா­விட்டால் என்ன நடக்கும் என்­ப­தையும் இரண்டாம் சுற்று வட்­டதில் என்ன நடக்கும்? என்­ப­தையும் எழு­தி­யி­ருந்தேன். ஆகவே ஜனாதி­பதித் தேர்தல் பாரா­ளு­மன்றத் தேர்­தல்­க­ளி­லி­ருந்து முற்­றிலும் மாறு­பட்­டது என்­பதை நீங்கள் மனதில் கொள்­ள­வேண்டும். இத்­தேர்தல் முறை மேலை­நா­டு­களில் சில­வற்றில் இன்றும் நடை­மு­றையில் உள்­ளது.

இத்­தேர்தல் முறை ஏன்

இலங்­கையில் புகுத்­தப்­பட்­டது?

காலம் சென்ற ஜனாதி­பதி ஜே.ஆர். ஜெய­வர்­தன ஜனாதி­பதி பத­வியில் இருந்து ஓய்வு பெற்­ற­போது நானும் இன்னும் சில சட்­டத்­த­ர­ணி­களும் ஜே.ஆர். ஜய­வர்­தனவை அவ­ரது இல்­லத்தில் சந்­தித்து ஒரு பேட்­டி­யெ­டுத்­த­போது நாங்கள் எழுப்­பிய கேள்வி ஒன்று என்­ன­வென்றால், ஜனாதி­பதித் தேர்­தலும் பாரா­ளு­மன்றத் தேர்தல் முறையும் ஏன் வெவ்­வே­றான முறையில் அமுல் நடத்­தப்­ப­டு­கி­றது? என்­றாகும். இலங்கை வெஸ்­மி­னிஸ்டர் அமைப்பைத் தழு­விய நாடு. சகல அர­சியல் அதி­கா­ரங்­களும் பாரா­ளு­மன்­றத்­துக்கும் முடிக்­கு­மே­யுள்­ளது. அமெ­ரிக்கா, பிரான்ஸ் போன்ற நாடு­க­ளி­லேயே பாரா­ளு­மன்ற அங்­கத்­த­வர்­களும் ஜனாதி­ப­தியும் வெவ்­வேறு முறை­களால் தெரிவு செய்­யப்­ப­டு­கின்­றனர். அப்­ப­டி­யி­ருக்­கும்­போது வெஸ்­மி­னிஸ்டர் முறையை இலங்கை பின்­பற்­றாமல் அமெ­ரிக்க முறையைப் பின்­பற்­றி­யது ஏன்? என்று கேள்வி எழுப்­பினோம்.

அதற்கு ஜனாதி­பதி பின்­வ­ரு­மாறு விடை­ய­ளித்தார்.

ஜனாதி­பதி பத­விக்கு போட்டி கட்சி ரீதி­யாக நடை­பெ­று­வதால் அவர் ஒரு கட்­சியைச் சேர்ந்­த­வ­ராக இருப்­பது அவ­சியம். அவர் பதவி ஏற்ற பின்னர் கட்சி அர­சி­யலில் குறை­வான ஈடு­பாடு உடை­ய­வ­ரா­கவே இருக்­க­வேண்டும். அத­னாற்றான் நான் பத­வி­யேற்ற பின்னர் கட்சி வேலை­களைப் பிரே­ம­தா­சவிடம் ஒப்­ப­டைத்தேன் என்றார்.

நாங்கள் கேட்ட இன்­னு­மொரு வினா, கட்சி ரீதி­யாகத் தெரிவு செய்­யப்­படும் ஜனாதி­பதி மற்­றைய கட்­சி­க­ளான எதிர்க்­கட்­சி­களை விசே­ட­மாக ஆட்சி செய்யும் கட்சி, ஜனாதி­ப­தியின் கட்­சியின் நின்றும் வேறு­பட்ட கட்­சி­யாக இருந்தால் அக்­கட்­சியை ஜனாதி­பதி ஒதுக்க மாட்­டாரா? என்­ப­தாகும்.

அதற்கு ஜே.ஆர். ஜய­வர்­தன அளித்த விடை பின்­வ­ரு­மா­றாகும்.

‘‘இலங்கை குடி­ய­ரசு அரசி­ய­ல­மைப்பு ஜனாதி­ப­திக்கு மீ உயர் அதி­கா­ரத்தை வழங்­க­வில்லையென்றும் பாரா­ளு­மன்­றத்­துக்கே அவ்­வ­தி­கா­ரத்தை வழங்­கி­யுள்­ளது என்றும் எதிர்க்­கட்சி பாரா­ளு­மன்­றத்தில் பெரும்­பான்­மையைப் பெற்­றாலும் ஜனாதி­பதி ஒன்றும் செய்­ய­மு­டி­யாது என்றும் பாரா­ளு­மன்­றமே நிதிக்­கட்­டுப்­பாட்டைச் செய்­வதால் ஜனாதி­ப­தியும் பாரா­ளு­மன்­றமும் ஒத்­துப்­போக வேண்­டு­மென்றும்’’ கூறினார்.

மேலும் அவர் கூறி­யதா­வது;

“பாரா­ளு­மன்றம் குற்ற மனுப்­பி­ரே­ர­ணையைக் கொண்­டு­வந்து ஜனாதி­ப­தியை அகற்ற விதி இருப்­ப­து­போல பாரா­ளு­மன்­றத்தைக் கலைக்க ஜனாதி­ப­திக்கு அதி­காரம் இருப்­ப­தையும் கவ­னித்தால் இரு­ப­கு­தி­யாரும் ஒரு­வ­ருடன் ஒருவர் ஒத்­துப்­போக வேண்டும்’’ என்றும் கூறினார்.

ஆயின், தற்­போ­தைய ஜனாதி­ப­திக்கும் அர­சாங்­கத்­துக்கும் இடையில் ஏற்­பட்ட குள­று­ப­டிகள் ஜே.ஆர். ஜய­வர்­தனவின் எண்­ணத்தை பிர­தி­ப­லிப்­ப­தாக இல்­லா­தி­ருந்­ததைக் காணலாம். ஜனாதி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன ஸ்ரீல.சு. கட்­சியைச் சேர்ந்­த­வ­ராவார். அர­சாங்கம் ஐக்­கிய தேசியக் கட்­சியை சேர்ந்­த­தாகும். இவர்­க­ளி­டையே கருத்­து­வேற்­றுமை ஏற்­பட்­ட­போது ஜனாதி­பதி பிர­தமரை பத­வி­நீக்கம் செய்­து­விட்டு புதிய பிர­தமராக மஹிந்த ராஜபக் ஷவை பிர­த­ம­ராக்­கினார். இதனால் ஜே.ஆர். கூறி­ய­துபோல் அரசில் குழப்பம் நில­வி­யதைக் காணலாம். ஒற்­று­மையைக் காண­மு­டி­ய­வில்லை.

19 ஆவது அர­சி­ய­ல­மைப்பு சீர்­தி­ருத்தம்

1978 ஆம் ஆண்டு மூல அர­சி­ய­ல­மைப்பில் ஜனாதி­ப­திக்கும் பாரா­ளு­மன்­றத்­துக்கும் இடையே அதி­கா­ரப்­போட்டி நடை­பெற்றால் யாருக்கு வெற்றி கிடைக்கும் என்­பது தெளி­வில்­லாமல் இருந்­தது. உதா­ர­ண­மாக ஜனாதி­ப­திக்கும் அர­சுக்கும் இடையே கொள்கை ரீதி­யான உடன்­பாடு இல்­லை­யெனில் நாட்­டைக்­கொண்டு நடத்­து­வது கஷ்டம். ஆகவே ஜனாதி­பதி பாரா­ளு­மன்­றத்தை கலைத்து பொதுத்­தேர்தல் நடத்த வேண்டும். இல்­லையேல் பாரா­ளு­மன்றம் ஜனாதி­ப­திக்கு எதி­ராக குற்ற மனுப் பிரே­ரணை கொண்டு வந்து ஜனாதி­ப­தியை பத­வி­யி­னின்றும் விலக்­க­வேண்டும். இவை இரண்டும் தார்­மீக ரீதி­யாக ஏற்­றுக்­கொள்­ளப்­பட முடி­யாது. ஏனெனில் இரு பகு­தி­யாரும் மக்­களின் வாக்­கு­களால் ஒரு குறித்த காலத்­துக்கு ஜனாதி­ப­தி­யா­கவும் பாரா­ளு­மன்ற அங்­கத்­த­வர்­க­ளா­கவும் கட­மை­யாற்ற மக்­களால் தெரிவு செய்­யப்­பட்­டவர்களாவர். ஆகவே அவர்­களில் ஒருவர் ஒருவர் நீக்க இட­ம­ளிப்­பதை விட இரு பகு­தி­யா­ரையும் சம­னான நிலைக்குக் கொண்­டு­வ­ர­வேண்­டி­யி­ருப்­பதே நன்று எனக் கூறலாம்.

இதனால் 1978 ஆம் ஆண்டு மூல அர­சி­ய­ல­மைப்பின் 70 ஆம் உறுப்­பு­ரையின் முதலாம் பந்தி நீக்­கப்­பட்டு அதற்குப் பதி­லாக கீழே கூறப்­படும் பந்­தி­யா­னது உட்­பு­குத்தப் பட்­டுள்­ளது. 19ஆவது அர­சி­ய­ல­மைப்பின் கீழேயே இது நடை­பெற்­றது.

“ஜனாதி­பதி பிர­க­ட­னத்தின் மூலம் பாரா­ளு­மன்­றத்தைக் கூடு­மாறு அழைக்­கலாம். அமர்வு நிறுத்­தலாம். அத்­துடன் கலைக்­கலாம். ஆயினும் ஜனாதி­பதி பாரா­ளு­மன்றம் அதன் முதல் கூட்­டத்­துக்­காக நிய­மித்த திக­தி­யி­லி­ருந்து நான்கு ஆண்­டுகள் ஆறு மாதங்­க­ளுக்கு குறை­யாமல் ஒரு காலப்­ப­குதி முடி­வுறும் வரை பாரா­ளு­மன்­றத்தின் மொத்த எண்­ணிக்­கையின் (சமு­க­ம­ளிக்­காதோர் உட்­பட) மூன்றில் இரண்­டுக்கும் குறை­யாத உறுப்­பி­னர்­களால் அதன் சார்பில் வாக்­க­ளித்து நிறை­வேற்­றப்­படும் தீர்­மானம் ஒன்­றினால் அவ்­விதம் செய்­யு­மாறு பாரா­ளு­மன்றம் வேண்­டி­னா­லொ­ழிய அதனை கலைத்­த­லா­காது” என்று கூறப்­பட்­டுள்­ளது.

ஜனாதி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பிர­த­மரை நீக்­கிய பின்னர் பாரா­ளு­மன்­றத்­தையும் கலைத்­த­போது அதற்கு எதிர்ப்­புத்­தெ­ரி­வித்­த­வர்கள் உயர்­நீ­தி­மன்றம் சென்­ற­போது நீதி­மன்றம் மேற்­படி பிரிவைச் சுட்­டிக்­காட்டி 4 ½ வருடம் முடி­வ­தற்­கி­டையில் பாரா­ளு­மன்றம் கலைக்­கப்­ப­ட­வேண்­டு­மானால் 2/3 பங்கு பாரா­ளு­மன்ற அங்­கத்­த­வர்­களின் ஆத­ரவு தேவை என சுட்­டிக்­காட்­டி­யது குறிப்­பி­டத்­தக்­கது. இவ்­வி­டத்தில் ஒரு முக்­கி­ய­மான வினா எழு­கி­றது.

முக்­கி­ய­மான வினா என்ன?

முக்­கி­ய­மான வினா என்­ன­வெனில் 2/3 பங்கு வாக்கு கிடைக்­கு­மாக இருந்தால் பாரா­ளு­மன்­றத்தை 4 ½ வரு­டத்­துக்கு முன்­னரும் கலைக்­கலாம் என்­ப­தாகும். இது நீக்­கப்­பட வேண்டும். இப்­பி­ரிவு இருப்­பதால் பாரா­ளு­மன்ற ஆட்சி உறு­தி­யா­ன­தாக இல்­லாமல் போகி­றது. இங்­கி­லாந்­திலும் இந்­நி­லையே இருந்­தது. 2010 க்கு முன்னர் இங்­கி­லாந்­திலும் இந்­நி­லையே இருந்­தது. பாரா­ளு­மன்­றத்தின் ஆயுட்­காலம் 2010 க்கு முன்னர் பிர­த­மரின் அதி­கா­ரத்தின் கீழ் இருந்­தது. இதனால் இங்­கி­லாந்தில் ஸ்திர­மான பாரா­ளு­மன்­றத்தின் ஆயுட்­காலம் இல்­லாமல் இருந்­தது. இங்­கி­லாந்தில் பிர­தம மந்­தி­ரியும் பாரா­ளு­மன்­றமும் 2010 க்கு முன்னர் அடிக்­கடி மாறினர். இதனை இங்­கி­லாந்து மாற்­றி­யது. Fixed term Parliament Act 2011 என்ற சட்­டத்தை இங்­கி­லாந்து பாரா­ளுன்றம் நிறை­வேற்­றிய பின்னர் இங்­கி­லாந்தில் பாரா­ளு­மன்றத் தேர்தல் 5 வரு­டத்­துக்கு ஒரு முறையே நடை­பெ­று­கி­றது. இப்­படி இலங்­கை­யிலும் கட்சித் தேர்­தல்­களே நடை­பெ­று­வதால் Fixed term Parliament Act கொண்டு வந்தால் இங்கு நிரந்­த­ர­மான பாரா­ளு­மன்ற ஆட்சி நடை­பெற இட­முண்டு எனலாம்.

இம்­முறை ஜனாதி­பதித் தேர்­தலில்

சிறு­பான்­மை­யி­னரின் நிலை

இம்­முறை ஜனாதி­பதித் தேர்­தலில் 35 பேர் போட்­டி­யி­டு­கின்­றனர். இவர்­களில் தமிழர் ஒரு­வரும், இஸ்­லா­மியர் ஒரு­வரும் உள்­ளனர். இவர்கள் எந்த பிர­தான கட்­சியின் சார்­பிலும் போட்­டி­யி­ட­வில்லை. தனிப்­பட்ட ரீதி­யி­லேயே போட்­டி­யி­டு­கின்­றனர். இந்­நிலை ஏன் காணப்­ப­டு­கி­றது என்­ப­தற்கு காரணம் சொல்ல வேண்­டு­மானால் இது ஒரு சாணக்­கிய நிலை என்றே சொல்­ல­வேண்டும்.

ஜனாதி­பதித் தேர்­தலில் 35 பேர் போட்­டி­யிட்­டாலும் அதில் 33 பேர் தென்­னி­லங்கை யைச் சார்ந்­த­வர்­க­ளாவர். அவர்­களில் 3 பேரே முக்­கி­ய­மாகப் பேசப்­ப­டு­ப­வர்­க­ளாவர். ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின் சார்பில் போட்­டி­யிடும் சஜித் பிரே­ம­தாச என்­பவர் ஒரு­வ­ராவார். ஸ்ரீ லங்கா பொது­ஜன முன்­ன­ணியில் போட்­டி­யிடும் கோத்­த­பாய ராஜபக் ஷ இரண்­டா­வது நப­ராவார். மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் சார்பில் போட்­டி­யிடும் அனுர திஸா­நா­யக்க என்­பவர் மூன்றாம் நப­ராவார்.

வர்­களில் மூவ­ருக்கும் இடை­யேதான் போட்டி நடை­பெ­று­கி­றது. விசே­ட­மாக ஐக்­கிய தேசிய முன்­ன­ணிக்கும் ஸ்ரீ லங்கா பொது­ஜன முன்­ன­ணிக்கும் இடை­யேதான் போட்டி கடு­மை­யா­க­வுள்­ளது. இவர்­களில் ஒரு­வர்தான் வெல்­லக்­கூ­டிய வாய்ப்பு இருப்­ப­தாகக் கூறப்­ப­டினும் அவர்கள் முத­லா­வது சுற்­று­வட்­டத்தில் வெற்றி பெறு­வார்­களா? என்று தற்­போது கூற­மு­டி­யாமல் இருக்­கி­றது. பெரும்­பான்மை சிங்­கள மக்கள் இவர்கள் இரு­வ­ரையும் கூடு­த­லாக ஆத­ரிக்­கின்­றனர் என்றும் மக்கள் விடு­தலை முன்­னணியையும் ஓர­ளவு ஆத­ரிக்­கி­றார்கள் என்றும் கூறலாம்.

ஜனாதி­பதி அபேட்­ச­கர்கள் சிறு­பான்­மை­யி­னரின் வாக்­கு­களை பெற செலுத்தும் கரி­ச­னையும் பெரி­தாக இல்லை. அதேபோல் சிறு­பான்மை இன­மான தமி­ழர்­களின் தலை­வர்­களும் அமை­தி­யாக இருக்­கின்­றனர். முஸ்லிம் தலை­வர்கள் ஐக்­கிய தேசிய முன்­ன­ணியை ஆத­ரிப்­ப­தாக பகி­ரங்­க­மாகக் கூறி­யுள்­ளனர். இவர்கள் இவ்­வாறு கூறு­வ­தற்கு நியாயம் இருக்­கி­றது. ஏனெனில், அவர்­க­ளது சமூகம் பட்ட கஷ்டம் கொஞ்ச நஞ்சம் அல்ல. அவர்கள் ஒரே நிலையில் இருப்­பது வர­வேற்­கத்­தக்­கது என அர­சியல் ஆய்­வா­ளர்கள் கூறு­கின்­றனர்.

தமி­ழர்­களைப் பொறுத்­த­வ­ரையில் அவர்கள் மெள­ன­மா­கவே இருக்­கின்­றனர். காரணம், இம்­முறை அவர்கள் தனித்­த­னி­யாக யாரையும் ஆத­ரிக்­காமல் கூட்­டாகச் சேர்ந்தே ஜனாதி­பதி அபேட்­ச­கரை ஆத­ரிக்­கப்­போ­வ­தாகக் கூறி­யுள்­ளனர். ஸ்ரீலங்கா பொது­ஜன முன்­னணி அபேட்­சகர் தனக்கு அவர்­களின் ஆத­ரவு தேவை­யில்லை என்றும் தான் அவர்­க­ளது கோரிக்­கை­களை ஏற்­கப்­போ­வ­தில்லை என்றும் பகி­ரங்­க­மாகக் கூறி­யுள்­ளதால் மேற்­படி தமிழ்த் தலை­வர்கள் தமது கோரிக்­கை­களை முன்­வைக்கக் கூட முடி­யாமல் இருக்கும் என்றும் கூறலாம்.

ஆயின் ‘ஆத்­தி­ரக்­கா­ர­னுக்கு புத்தி மட்டு’ என்­பது போல் தமிழ், முஸ்லிம் மக்­களின் வாக்­குகள் இம்­முறை ஒரு பக்­கத்­துக்கே சரி­யப்­போ­கின்­றது போல் ஊட­கங்­க­ளிலும், தொலைக்­காட்­சி­க­ளிலும் வரும் செய்­திகள் தெரி­விக்­கின்­றன.

சில வேளை­களில் இவ்­வாக்­குகள் ஒரு­வரை வெற்றி பெறச் செய்­யவும் கூடும் எனவும் அவர்கள் எதிர்­பார்க்­கி­றார்கள். அவர்கள் காட்டும் புள்­ளி­வி­ப­ரங்கள் இதனைச் சற்றுச் சிந்­திக்க வைத்­துள்­ளன எனவும் கூற­வேண்டும். அவர்கள் 2015ஆம் ஆண்டு தேர்­தல்­களில் மக்கள் அளித்த வாக்­கு­களின் புள்­ளி­வி­ப­ரத்தை காட்­டி­யுள்­ள­துடன் இம்­முறை இத­னை­விட கூடு­த­லான வாக்­கா­ளர்கள் உள்­ளனர் எனவும் ஆகவே, இத்­தொ­கையை விட கூடு­த­லான வாக்­கு­களை தமிழ், முஸ்லிம் மக்கள் இம்­முறை அளிக்க இட­முண்டு என்­பது உண்­மை­யாகும். வாக்­காளர் இடாப்பில் இதனைக் காணலாம். பழைய வாக்­காளர் இடாப்பின் புள்­ளி­வி­பரம் பின்­வ­ரு­மாறு:

மொத்த வாக்காளர்

1. திகா­ம­டுல்ல .. 465,757

2. யாழ். மாவட்டம் .. 529,239

3. வன்னி மாவட்டம் .. 253,058

4. மட்­டக்­க­ளப்பு மாவட்டம் .. 365,167

5. திரு­மலை மாவட்டம் .. 256,852

6. கொழும்பு வடக்கு .. 89,771

7. கொழும்பு மத்தி .. 131,482

8. கொழும்பு மேற்கு .. 40,609

9. கொழும்பு கிழக்கு .. 66,941

10. தெஹி­வளை .. 59,812

11. நுவ­ரெ­லியா .. 534,150

12. கண்டி .. 1,266,160

13. பதுளை .. 620,486

மொத்தம் .. 4,113,727

இவை 2015ஆம் ஆண்டு எடுக்­கப்­பட்ட கணக்­கெ­டுப்பு. தற்­போது இத­னை­விட கூடு­த­லான வாக்­க­ாளர்கள் உண்டு என்று கரு­தலாம். இது ஒரு சிறிய உதா­ர­ணத்­துக்கு எழு­தப்­பட்­டுள்­ளது.

ஆகவே, சிறு­பான்மை இன, மத வாக்­குகள் இம்­முறை மிகக் கூடு­த­லாக இருக்­கின்ற படியால் அவர்கள் ஒரே கட்­சிக்கு வாக்­க­ளித்தால் ஐக்­கிய தேசிய முன்­ன­ணிக்கு அது வாய்ப்­பாக அமை­யலாம். தேர்தல் கள­நி­லையைப் பார்க்­கும்­போது சிறு­பான்மை இன, மதத்­தவர் வேறு கட்­சி­க­ளுக்கு தாவக்­கூ­டிய நிலையில் இல்லை என்றும் கூறலாம்.

சிறு­பான்மை இன, மதத்­த­வர்­களை கவர்­வ­தற்­காக மேலே கூறிய முக்­கிய கட்­சி­க­ளான ஐக்­கிய தேசிய முன்­னணி, ஸ்ரீலங்கா பொது­ஜன முன்­னணி, மக்கள் விடு­தலை முன்­னணி என்­பன மேலும் சில நட­வ­டிக்­கை­களை எடுத்து வாக்­கு­களைக் கவர முயற்­சிக்­கலாம். இம்­மு­யற்சி வெற்றி பெறுமா? என்­பதைப் பொறுத்­தி­ருந்தே பார்க்க வேண்டும்.

ஐக்­கிய தேசிய முன்­னணி, சிறிலங்கா பொது­ஜன முன்­னணி தவிர்ந்த ஏனைய அபேட்­ச­கர்­களின் நிலை

மேலே கூறிய இருவர் தவிர ஏனைய 33 பேரின் நிலை எப்­படி இருக்கும் என பார்ப்போம். மேற்­படி 33 பேரில் மக்கள் விடு­தலை முன்­ன­ணியே கூடு­த­லாக வாக்­கு­களைப் பெறும். முதன் முதலில் ரோஹண விஜ­ய­வீர மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் சார்பில் போட்­டி­யிட்­ட­போது கிட்­டத்­தட்ட இரண்டு இலட்சம் வாக்­கு­களைப் பெற்றார். பின்னர் நந்­தன குண­தி­லக்க போட்டி போட்­ட­போது முன்­னைய வாக்­கு­க­ளை­விட கூட வாக்­கு­களைப் பெற்றார். இம்­முறை அநுர திசா­நா­யக்க மேலே கூறப்­பட்ட இரு­வ­ரையும் விட பல இலட்ச வாக்­குகள் கூடப் பெறுவார் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.

ஏனை­ய­வர்­களின் நிலை பற்றி அறிந்­து­கொள்ள முடி­யாமல் இருக்­கி­றது. ஆயின் அவர்கள் 32 பேர் பெறும் வாக்­கு­க­ளையும் கூட்­டினால் சில இலட்சம் வாக்­குகள் வரலாம் இம்­முறை ஜனாதி­பதி தேர்தல் முடிவு ஒரு விசித்­திர முடி­வா­கவே இருக்­கப்­போ­கி­றது.

ஜனாதி­பதி பற்றி பாரா­ளு­மன்­றத்­தி­லுள்ள அதி­காரம்

ஜனாதி­ப­தியின் வேதனம், ஓய்வு ஊதியம், மேலும் ஜனாதி­ப­தியை அகற்றும் அதி­காரம் என்­பன பாரா­ளு­மன்­றத்­தினால் தீர்­மா­னிக்­கப்­படும்.

இலங்கை அர­சி­ய­ல­மைப்பின் 36 (1)(2)(3)(4) ஆகிய பிரி­வுகள் ஜனாதி­ப­தியின் சம்­ப­ளமும் ஓய்­வூ­தி­யமும் பற்றிக் கூறு­கி­றது.

அர­சி­ய­ல­மைப்பு தொடங்­கு­வ­தி­லி­ருந்து ஒரு­மாத காலத்­தினுள் ஜனாதி­பதி என்ற பத­வியை வகிப்போர் பெறு­வ­தற்­கு­ரிய சம்­ப­ளத்­தையும் படி­க­ளையும் ஓய்­வூ­தி­யத்­தையும் பாரா­ளு­மன்றம் தீர்­மா­னத்தின் மூலம் தீர்­மா­னித்தல் வேண்டும். அத்­த­கைய ஓய்­வூ­தியம் ஏதேனும் முந்­திய சேவையின் பய­னாக அத்­த­கைய ஆளுக்கு உரித்­தான வேறே­தேனும் ஓய்­வூ­தி­யத்­துக்கு மேல­தி­க­மா­ன­தா­க­யி­ருத்தல் வேண்டும்.

ஜனாதி­பதி என்ற பத­வியை ஏற்­பதன் மேல் அத்­த­கைய பத­வியை தாங்­கு­பவர் பாரா­ளு­மன்­றத்­தினால் தீர்­மா­னிக்­கப்­ப­டக்­கூ­டி­ய­வா­றான அத்­த­கைய சம்­ப­ளத்­தையும் படி­க­ளையும் பெறு­வ­தற்கும் அதன் பின்னர் அத்­த­கைய ஓய்­வூ­தி­யத்­தையும் பெறு­வ­தற்கு உரித்­து­டை­ய­வராய் இருத்தல் வேண்டும்.

ஜனாதி­ப­தியின் சம்­ப­ளமும் படி­களும் ஓய்­வூ­தி­யமும் திரட்டு நிநி­யத்தின் மீது பொறுப்­பிக்­கப்­ப­டுதல் வேண்டும்.

பாரா­ளு­மன்­றத்தின் தீர்­மா­னத்தின் மூலம் ஜனாதி­பதி என்ற பத­வியை வகிப்போர் பெறு­வ­தற்கு உரித்­து­டை­ய­வ­ரா­யி­ருக்கும் சம்­ப­ளத்தை அல்­லது ஓய்வு ஊதி­யத்தை அதி­க­ரிக்­கலாம். ஆனால் குறைத்­த­லா­காது.

ஜனாதி­பதி சுக­வீனம் கார­ண­மாக இலங்­கையில் இல்­லாமை கார­ண­மாக அல்­லது வேறு ஏதேனும் கார­ண­மாக தமது பத­விக்­கு­ரிய தத்­து­வங்­க­ளையும் கட­மை­க­ளையும் பணி­க­ளையும் பிர­யோ­கிப்­ப­தற்கும் புரி­வ­தற்கும் நிறை­வேற்­று­வ­தற்கும் இய­லா­தி­ருப்­பா­ரெனக் கரு­து­வா­ரெனில் அத்­த­கைய காலத்­தின்­போது ஜனாதி­பதி என்ற பத­வியில் முத­ல­மைச்­சரை ஜனாதி­பதி என்ற பத­விக்­கு­ரிய தத்­து­வங்­க­ளையும் கட­மை­க­ளையும் பணி­க­ளையும் பிர­யோ­கிப்­ப­தற்கும் நிறை­வேற்­று­வ­தற்கும் அவர் நிய­மிக்­கலாம். என்­ப­துடன் அத்­த­கைய காலத்­தின்­போது முத­ல­மைச்சர் என்ற பத­வியில் கடமை ஆற்­று­வ­தற்­கென ஏனைய அமைச்­சர்­களில் ஒரு­வ­ரையும் நிய­மிக்­கலாம்.

ஆயின், அப்­போது முத­ல­மைச்சர் பதவி வறி­தா­க­வி­ருப்பின் அல்­லது முத­ல­மைச்சர் செய­லாற்ற இய­லா­தி­ருப்பின் அத்­த­கைய காலப்­ப­கு­தி­யின்­போது ஜனாதி­ப­தியின் பத­விக்­கான தத்­து­வங்­க­ளையும் கட­மை­க­ளையும் பணி­க­ளையும் பிர­யோ­கிப்­ப­தற்கும் புரி­வ­தற்கும் நிறை­வேற்­று­வ­தற்கும் அவர் சபா­நா­ய­கரை நிய­மிக்­கலாம்.

ஜனாதி­பதி பத­வியை வறி­தாக்கல்

ஜனாதி­ப­தியின் பதவி பின்­வரும் சூழ்­நி­லை­களில் வறி­தாகும்

அ. அவர் இறப்­பதன் மேல்

ஆ. அவர் சபா­நா­ய­க­ருக்கு தனது கைப்­பட கடி­தத்தை எழுதி அனுப்­பு­வதன் மூலம்

இ. அவர் இலங்­கையின் ஒரு பிர­ஜை­யாக இல்­லா­தொ­ழிந்தால்

ஈ. ஜனாதி­ப­தி­யாக தெரிவு செய்­யப்­பட்ட ஆள் தமது பத­விக்­காலம் தொடங்­கிய திக­தி­யி­லி­ருந்து ஒரு மாதத்­துக்­குள்­ளாக வேண்­டு­மென்றே பத­வி­யேற்கத் தவ­றினால்

உ. உயர்­நீ­தி­மன்றம் அதன் தத்­து­வங்­களைப் பிர­யோ­கிக்­கையில் அவர் ஜனாதி­ப­தி­யாகத் தெரிவு செய்­யப்­பட்­டமை வெற்றும் வறிது எனத் தீர்­மா­னித்தால்

ஊ. குற்­றச்­சார்த்தல் மூலம் அவர் பதவி நீக்­கப்­பட்டால் ஜனாதி­ப­தியின் பதவி வறி­தாகும்.

பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எவரும் சபா­நா­ய­க­ருக்கு முக­வ­ரி­யிட்டு அனுப்பும் கடி­தத்தின் மூலம் ஜனாதி­பதி அவ­ருக்­கு­ரிய பணி­களை நிறை­வேற்­று­வ­தற்கு நிரந்­த­ர­மாக இய­லா­த­வ­ரா­க­வுள்ளார் என்றோ அல்­லது பின்­வ­ரு­வ­ன­வற்றை புரிந்­த­தற்குக் குற்­ற­வா­ளி­யா­கிறார் என்று கூறும் பட்­சத்தில் உயர் நீதி­மன்­றத்­தினால் அதன் மீது விசா­ரணை நடத்­தப்­படுதல் வேண்­டு­மெ­னவும் அறிக்கை சமர்ப்­பிக்­கப்­ப­டுதல் வேண்­டு­மெ­னவும் கோரு­தலும் வேண்டும்.

1. அர­சி­ய­ல­மைப்பை வேண்­டு­மென்றே மீறிய குற்றம்

2. தேசத்­து­ரோகம் புரிந்த குற்றம்

3. இலஞ்சம் பெற்ற குற்றம்

4. தனது பத­வியை துஷ்­பி­ர­யோகம் செய்த குற்றம் அல்­லது ஊழ­லுக்­கான குற்றம்

5. ஏதேனும் சட்­டத்தின் கீழான தவறு

மேற்­படி கடி­தத்தில் மேலே­யுள்ள விட­யங்கள் பற்றி உயர் நீதி­மன்­றத்­தினால் விசா­ரணை நடத்தி அறிக்கை சமர்ப்­பிக்­கப்­ப­டுதல் வேண்­டு­மென்றும் கோரு­தலும் வேண்டும்.

இக்­கோ­ரு­த­லுக்கு பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களின் முழு­எண்­ணிக்­கையில் 2/3 பங்­கி­னரின் கையொப்­பத்­துக்­குமேல் கையொப்பம் இட்­டி­ருக்க வேண்டும்.

மேற்­படி கோரிக்கை அடங்­கிய தீர்­மானம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களின் முழு எண்­ணிக்­கையில் (சமு­க­ம­ளிக்­காதோர் உட்­பட) 2/3 பங்­கி­னர்க்குக் குறை­யா­த­வர்கள் அதற்குச் சாத­க­மாக வாக்­க­ளிப்­பதன் மூலம் நிறை­வேற்­றப்­ப­டு­மி­டத்து அத்­த­கைய தீர்­மா­னத்தில் அடங்­கி­யுள்ள குற்­றச்­சார்த்தல் விசா­ர­ணைக்கும் அறிக்­கைக்­கு­மெனச் சபா­நா­ய­கரால் உயர்­நீ­தி­மன்­றத்­துக்கு ஆற்­றுப்­ப­டுத்தல் வேண்டும்.

உயர்­நீ­தி­மன்றம் உரிய நட­வ­டிக்­கையின் பின்னர் ஜனாதி­பதி மீது சுமத்­தப்­பட்­டுள்ள குற்­றச்­சாட்­டுக்கு ஆதா­ர­மில்லை என்று உயர் நீதி­மன்றம் அறி­வித்தால் அதனை சபா­நா­யகர் பாரா­ளு­மன்­றத்­துக்கு அறி­விக்­க­வேண்டும். அத்­துடன் அக்­குற்­றச்­சார்த்தல் முடி­வுக்கு வந்­து­விடும்.

காலம் சென்ற கலா­நிதி என்.எம்.பெரேரா 1981 ஆம் ஆண்டு புதிய அர­சி­ய­ல­மைப்பில் உள்ள மேற்­படி பிரிவை விமர்­சித்து கூறி­யது என்­ன­வெனில், பாராளுமன்றமானது 2/3 பங்கினரின் கையொப்பத்துடன் குற்றச்சார்த்தலைத் தெரிவித்தாலும் உயர்நீதிமன்றம் அதனை ஏற்கமறுத்து அத்தகைய குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லையென்று கூறலாம் என்று குறிப்பிட்டிருந்தது இங்கு குறிப்பிடத்தக்கதாகும். ஆகவே பாராளுமனறம் ஜனாதிபதி ஒருவரை பதவி விலக்குவது என்பது நடைமுறையில் சாத்தியமானதும் இலகுவானதாகவும் கொள்ளமுடியாது எனக்கூறலாம்.

தொகுப்புரை

இம்முறை நடைபெறப்போகும் ஜனாதிபதித் தேர்தல் பலவழிகளிலும் இதற்கு முன்னர் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல்களினின்றும் வேறுபட்டுக் காணப்படுகிறது.

35 பேர் போட்டிபோடும் இத் தேர்தலில் பலர் வெற்றி பெற முடியாதெனத் தெரிந்தும் போட்டியிடுகின்றனர். ஏனெனில் அவர்கள் போட்டியிடுவது வெற்றியீட்டுபவரின் வாக்குகளை சிதறடிக்க என்று ஒரு கருத்தும் தெரிவிக்கப்படுகிறது. அது தவறு என்று கூறமுடியாது. 35 பேர்வழிகளிலும் சிறுபான்மை இனமான தமிழர் ஒருவராக சிவாஜிலிங்கம் போட்டியிடுகிறார். அதேபோல் ஹிஸ்புல்லாஹ்வும் போட்டி­யிடுகிறார். அதேபோல் இன்னும் பலர் போட்டியிடுகின்றனர். அவர்கள் ஏதோ ஒரு திட்டத்தின் அடிப்படையிலேயே போட்டியிடுகின்றார்கள் என்று கூற வேண்டும்.

இம்முறை போட்டியில் தமிழ் இனத்தவர் (சிவாஜிலிங்கத்தைத் தவிர) வேறு ஒருவரும் போட்டியிடவில்லை. ஆகவே தமிழ் இனத்தவரின் வாக்குகள் பல இலட்சக்கணக்கான வையாக இருக்கின்றன. அவ்வாக்குகளை யார் பெறுவர் என்று பல ஆய்வாளர்கள் பல கருத்துகளைக் கூறி வருகின்றனர். தமிழர்களது வாக்கு இல்லாமலே தான் வெற்றிபெற முடியும் என்ற துணிவுடன் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி அபேட்சகர் போட்டி யிடுகிறார். அதேபோல் யாருடைய உதவியும் இல்லாமல் தமிழர் ஒருவரும் தான் வெற்றிபெற முடியும் என்ற எண்ணத்தில் போட்டியிடுகிறார். இவை பாராட்டப்பட வேண்டிய விடயமாகும்.

இம்முறை ஜனாதிபதி தேர்தல் நியமனப்பத்திரம் தாக்கல் செய்யப்படும் வரையில் பல தடைகளைத் தாண்டியே வந்துள்ளது. மேலும் ஒவ்வொரு ஜனாதிபதித் தேர்தலிலும் தேர்தல் சண்டைகள் பெருமளவில் இருப்பது போல் இம்முறை பலத்த சண்டைகள் இல்லை.

இம்முறைத் தேர்தலில் இராணுவத்தைச் சேர்ந்த அல்லது இராணுவத்துடன் தொடர்புடைய பலர் போட்டியிடுவதால் இத்தேர்தல் முடிவு எப்படி இருக்கும் என்றும் பார்க்க ஆவலுடன் மக்கள் இருக்கின்றனர்.

இதுவரை காலமும் சிவிலியன்களே இப்பதவிக்குத் தெரிவு செய்யப்பட்டனர். இம்முறை தெரிவு எப்படியிருக்கும் எனப் பார்ப்போம்.

கே.ஜி. ஜோன்

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!