பிறந்த பெண் குழந்தையை உயிருடன் அடக்கம் செய்த தாத்தா…!

தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் பிறந்த பெண் குழந்தையை தாத்தாவும் மற்றொரு உறவினரும் சேர்ந்து உயிருடன் அடக்கம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.எனினும், ஆட்டோ ஓட்டுநர் அளித்த தகவலை அடுத்து குழந்தையை மீட்ட பொலிஸார் இரண்டு பேரையும் கைது செய்துள்ளனர். செகந்திராபாத்தின் மையப்பகுதியான ஜூபிலி பேருந்து நிலையத்திலித்திற்கு அருகே இச்சம்பவம் நடந்துள்ளது.

சம்பவம் குறித்து ஆட்டோ ஓட்டுநரான குமார் கூறியதாவது, சந்தேகத்திற்கிடமான வகையில் இரண்டு நபர்கள் துணியால் எதையோ மூடிவைத்திருந்ததை கண்டேன்.அவர்கள் பேருந்து நிலையத்திற்கு அருகில் ஒதுங்கிய இடத்தில் குழி தோண்டத் தொடங்கினார். பின்னர், குழிக்குள் மூட்டையை வைத்து மூட தொடங்கினர். உடனே நான் தகவல் கொடுக்க பொலிஸார் சம்பவயிடத்திற்கு விரைந்தனர் என தெரிவித்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் இருவரையும் கேள்வி கேட்கத் தொடங்கியுள்ளனர். பிறக்காத குழந்தையை அடக்கம் செய்வதாக அவர்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.ஆனால் புதிதாகப் பிறந்த பெண் குழந்தை தனது கைகளையும் கால்களையும் நகர்த்தத் தொடங்கியபோது, ​​ இருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். பின்னர், குழந்தையை மீட்டு அரசாங்கத்தால் நடத்தப்படும் காந்தி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.

குழந்தையை கையில் வைத்திருந்த பெரியவர் திருப்பதி, குழந்தையின் தாத்தா என அடையாளம் காணப்பட்டுள்ளார், குழித் தோண்டியவர் உறவினர் ராஜேந்திரா என அடையாளம் காணப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.குழந்தை நலமாக இருப்பதாக தெரிவித்துள்ள பொலிஸார், விசாரணைியல் முன்னுக்கு பின் முரணாக பதிலளிக்கும் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்படும் என தெரிவித்துள்ளனர்.

மேலும், பெண் குழந்தைக்கு சில மருத்துவ சிக்கல்கள் இருந்ததாகவும், சிகிச்சைக்கான செலவை குடும்பத்தால் செலுத்த முடியாமல் போயிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. இருப்பினும், அவர்கள் குடும்பத்திற்கு ஆலோசனை வழங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!