கோத்தாவின் தேர்தல் விஞ்ஞாபனத்தை விடவும் சஜித்தின் தேர்தல் விஞ்ஞாபனம் திருப்தியளிக்கிறது

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தை விடவும் ஆரோக்கியமானதும் திருப்திகரமான, தமிழ் மக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடிய விதத்திலான தேர்தல் விஞ்ஞாபனத்தை புதிய ஜனநாயக முன்னணி முன்வைத்துளதென கருதுவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவிக்கின்றது.

தாம் தொடர்ச்சியாக முன்வைத்து வந்த கோரிக்கைகள் சஜித்தின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்வாக்கப்பட்டுள்ள நிலையில் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு நிலைபாட்தை விரைவில் அறிவிக்கவுள்ளதாவும் கூறுகின்றது.

புதிய ஜனநாயக முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டுள்ள நிலையில் பிரதான இரண்டு வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்களை கொண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னெடுக்கவுள்ள அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து வினவிய போதே கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் ஊடகப்பேச்சாளருமான எம்.எ.சுமந்திரன் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!