ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 6 வயது சிறுவன் உயிருடன் மீட்பு!

மகாராஷ்டரா மாநிலம் நாசிக்கில் 300 அடி ஆழம் கொண்ட ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 6 வயது சிறுவனை தேசியப் பேரிடர் மீட்புக் குழுவினர் பல மணி நேரம் போராடி மீட்டனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் சிறுவனின் உடல் நிலை இயல்பு நிலைக்குத் திரும்பிவிட்டதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அண்மையில் நாட்டையே உலுக்கும் அளவுக்கு மணப்பாறை அருகே 2 வயது குழந்தை சுஜித் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து உயிரிழந்த சம்பவத்தையடுத்து இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஆயினும் சிறுவன் உயிருடன் மீட்கப்பட்டு விட்டதால் அப்பகுதி மக்கள் நிம்மதியடைந்தனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!