முஸ்லிம்களையும் ஒன்றிணைத்து தனி ஈழத்தை உருவாக்க கூட்டமைப்பு திட்டம் குண­தாச அம­ர­சே­கர

Vavuniaதமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தேர்தல் விஞ்­ஞா­ப­ன­மா­னது பிரி­வி னைவாதத்­திற்­கான அடித்­த­ள­மாகும். தமிழ் பேசும் முஸ்­லிம்­க­ளையும் ஒன்­றி­ணைத்து தனி ஈழ நாட் ­டினை உரு­வாக்கும் நோக்­கி­யி­லேயே சம்­பந்தன் கூட்­டணி செயற்­ப­டு­கின்­றது என்று தேசிய ஒருங்­க­மைப்பு ஒன்­றியம் குற்றம் சுமத்­தி­யுள்­ளது.

தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு தமது தேர்தல் பிர­சா­ரத்­தினை செய்­வ­தாகத் தெரி­ய­வில்லை. மாறாக தமிழ் ஈழத்­தினை உரு­வாக்­கு­வ­தற்­கான முதற் கட்ட நட­வ­டிக்­கை­யி­னையே தற்­போது ஆரம்­பித்­துள்­ளது. கூட்­ட­மைப்பினர் தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் தனி அரசு கோரிக்­கை­யி­னையே முன்­வைத்­துள்­ளனர். இது நாட்டின் பிரி­வி­னைக்­கான பிர­தான சக்­தி­யாகும் என்று குறிப்பிட்டார்.

13ஆவது திருத்தச் சட்­ட­மா­னது நீதிக்கு முர­ணா­ன­தா­கவே காணப்­ப­டு­கின்­றது. இதன் மூலம் மக்­க­ளுக்கே அதிக பாதிப்பு ஏற்­படும் என மக்கள் உணர்ந்து கொள்­ள­வேண்டும். எனவேஇ நவம்­பரில் நடை­பெ­ற­வி­ருக்கும் பொது­ந­ல­வாய மாநாட்டின் பின்னர் மக்கள் தீர்ப்­பொன்றின் மூல­மாக 13ஆவது திருத்­தத்­திற்­கான நட­வ­டிக்­கை­யொன்­றினை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தர்ர.

தமிழ் தேசியக் கூட்­ட­மைப்­பா­னது சர்­வ­தேச சக்­தி­களின் உத­வி­யோடு பிரி­வி­னை­யினை ஏற்­ப­டுத்த முயல்­கின்­றது. ஒரு புறம் நவ­நீ­தம்­பிள்­ளையின் ஆத­ரவும்இ மறு புறத்தில் புலம்­பெயர் தமி­ழர்­க­ளி­னது பண பலமும் சர்­வ­தேச நாடு­களின் தலை­யீட்­டி­னையும் கொண்டே தமக்­கான தேர்தல் விஞ்­ஞா­ப­னத்­தினை கூட்­ட­மைப்­பினர் உரு­வாக்­கி­யுள்­ளதாகவும் குறிப்பிட்டர்ர.

எனவே ஜனா­தி­பதி மகிந்த ராஜ­பக்ஷ இதற்­கான சிறந்த நட­வ­டிக்­கை­யினை எடுக்­க­வேண்டும். தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பினால் கொண்டு வரப்­பட்­டுள்ள தேர்தல் விஞ்­ஞா­பனத்­தினை இரத்து செய்து அர­சாங்­கத்தின் பலத்­தினை நிரூ­பிக்க வேண்டும் எனவும் தெரி­வித்தார்.

Tags: , ,

Leave a Reply