அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோன் எவ். கென்னடி படுகொலை செய்யப்பட்ட தினத்தில் பிடிக்கப்பட்ட அரிய புகைப் படங்கள் பல தசாப்தங்களுக்குப் பின்னர் முதல் தடவையாக காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
1961 ஆம் ஆண்டு தனது 43 ஆவது வயதில் அமெரிக்காவின் இரண்டாவது மிக இளம் ஜனாதிபதியாக பதவியேற்ற ஜோன் எவ். கென்னடி, அமெரிக்காவின் மிகப் புகழ்பெற்ற ஜனாதிபதியாக விளங்கினார். 1963 நவம்பர் 22 ஆம் திகதி அவர் டல்லாஸ் நகரில் தனது மனைவி ஜக்குலின் சகிதம் திறந்த காரொன்றில் சென்றுகொண்டிருந்தபோது லீ ஒஸ்வால்ட் என்பவனால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
கென்னடி சுடப்படுவதற்கு முன்னர் அவர் காரில் சென்றுகொண்டிருந்த போது அங்கிருந்தவர்களால் பிடிக்கப்பட்ட பல புகைப்படங்கள் பல தசாப்த காலத்தின் பின் நியூயோர்க் நகரிலுள்ள சர்வதேச புகைப்படவியல் நிலையத்தில் இப்போது காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
இவற்றில் ஒருசில படங்கள் பலவருடங்களுக்கு முன்னர் ஊடகங்களில் செய்திகளுடன் வெளியிடப்பட்டன. பெரும்பாலான படங்கள் இதற்குமுன் பகிரங்கப்படுத்தப்படாதவையாகும்.

















