லட்சக்கணக்கான மக்களின் பாராட்டை பெற்ற பிச்சைக்காரர்!… அப்படி என்ன செய்துவிட்டார்?

தமிழகத்தில் ஓசிக்கு டீ வாங்கி குடிக்க மாட்டேன் என பிச்சைக்காரர் ஒருவர் கூறிய வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கோயம்புத்தூரின் கவுண்டம்பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட டீக்கடையில் பிச்சைக்காரர் ஒருவர் டீ குடிக்க வந்துள்ளார்.

அவரை பார்த்ததும் மற்றவர்கள் முகம் சுழிக்க, தம்ளரில் டீ ஊற்றிக் கொடுத்த கடைக்காரர் சற்று தள்ளி அமர்ந்து குடிக்கும்படி கூறியுள்ளார்.

உடனடியாக தன் பையில் இருந்து ரூ.10யை எடுத்து நீட்ட கடைக்காரரோ ”பரவாயில்லை” என கூறியுள்ளார்.

அதற்கு நான், “ஓசியில் டீ குடிக்க மாட்டேன், 10 ரூபாயை வாங்கினால் தான் டீ குடிப்பேன்” என அடம்பிடித்துள்ளார்.

வேறுவழியின்றி கடைக்காரரும் காசை வாங்க, டீ குடித்து விட்டு சென்றுள்ளார் அந்த பிச்சைக்காரர்.

இச்சம்பவத்தை அங்கிருந்த ஒருவர் வீடியோ எடுத்து வெளியிட சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!