மோதிக் கொண்ட டிப்பர்கள்- சாரதி படுகாயம்!

யாழ்ப்பாணம் – நீர்வேலி இராஜவீதியில் நேற்று இரண்டு டிப்பர் வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்தார். டிப்பர் வாகனத்தின் சாரதி ஒருவரே காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. யாழ்ப்பாணத்திலிருந்து, அச்சுவேலி நோக்கி சென்று கொண்டிருந்த டிப்பர் வாகனமும், எதிர் திசையில் அச்சுவேலியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்த டிப்பர் வாகனமும் மோதியதிலேயே இவ்விபத்து நேர்ந்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!