உலக சுகாதார நிறுவன பணிப்பாளருடன் ஜனாதிபதி பேச்சு!

உலக சுகாதார அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளருடன், ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டார். இதன்போது தற்போதும் நிலவும் நெருக்கடியால் இலங்கையில் ஏற்படக்கூடிய சுகாதார மற்றும் பொருளாதார பாதிப்புகள் தொடர்பான விடயங்களை இருவரும் விவாதித்தனர்.

இந்த சந்திப்பு குறித்து டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ள உலக சுகாதார அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் அனைவரையும் அணிதிரட்டியதற்காக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுக்கு பாராட்டுக்களையும் தெரிவித்திருந்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!