இலங்கையில் இந்துக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரிப்பு – யோகேஸ்வரன்

yogeswaranபோருக்குப் பின்னர் இலங்கையில் இந்துக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.

விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு இந்து மக்கள் கட்சி தமிழகம் சார்பில் கோவையின் பல்வேறு பகுதிகளில் 18 விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது. ஐந்தாம் நாளான நேற்று வெள்ளிக்கிழமை சிலைகள் அனைத்தும் விசர்ஜனத்துக்காக ராஜவீதி தேர்நிலைத் திடலுக்கு கொண்டு வரப்பட்டு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.

இதில் பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு விசர்ஜன ஊர்வலத்தைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

அங்கு உரையாற்றிய அவர்,

இலங்கையின் பூர்வீக மக்கள் இந்துக்கள் ஆவர். அது இந்து மத மக்களின் புண்ணிய பூமியாகும். காலப்போக்கில் அங்கு பெளத்த மதத்தினர் குடியேறி தற்போது ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.

இந்து மக்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த அந்த மண்ணில் தற்போது இந்து கோவிகள் இடிக்கப்பட்டு வருகின்றன. இந்துக்களின் புராதன சின்னங்கள் அழி்க்கப்படுகின்றன. அதற்குப் பதிலாக புத்த மதக் கோவில்கள் அங்கு கட்டப்பட்டு வருகின்றன.

இந்து மதத்தைச் சேர்ந்த மக்கள் மீது வன்முறைகளும் அரங்கேறி வருகின்றன. இந்துக்களின் நிலங்கள், இடங்கள் ஆக்கிரமிக்கப்படுகின்றன. தமிழ் ஈழ போருக்குப் பிறகு இது அதிகரித்துள்ளது.

இந்தியாவில் விநாயகர் சதுர்த்தி விழா வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஆனால் அங்கு இத்தகைய சூழல்கள் இல்லை என்றார்.

இந்நிகழ்வில் இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத், பனுன் காஷ்மீர் அமைப்பின் தலைவர் அஷ்வனி குமார் சுருங்கூ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags: , ,

Leave a Reply