19 மாவட்டங்களில் இனி 20 ஆம் திகதியே ஊரடங்கு தளர்வு!

கொழும்பு, கம்பஹா, களுத்றை, புத்தளம், கண்டி, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு மீள் அறிவித்தல் வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், ஏனைய 19 மாவட்டங்களில் ஊரடங்கு இன்று காலை 6.00 மணிக்கு தளர்த்தப்பட்டுள்ளது. இங்கு, பி.ப 4.00 மணிக்கு மீண்டும் ஊரடங்கு அமுல்படுத்தப்படவுள்ளது.

19 மாவட்டங்களிலும், இன்று பிற்பகல் அமுல்படுத்தப்படும் ஊரடங்கு உத்தரவு 20 ஆம் திகதி காலை 6.00 மணிவரை அமுலில் இருக்கும் எனவும், அறிவிக்கப்பட்டுள்ளது. மீண்டும் அதனை அமுல்படுத்தும் நேரம் குறித்து பின்னர் அறிவிக்கப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!