‘ஒரு வயசு மகனுக்கு விஷம் கொடுத்த அப்பா…’ ‘மீதி விஷத்தை அவரும் குடிச்சிருக்கார்…’ நெஞ்சை உறைய வைக்கும் சோக நிகழ்வு…!

குடும்ப தகராறில் தந்தையே தனது ஒரு வயது குழந்தைக்கு விஷம் கொடுத்து தானும் தற்கொலை செய்துக் கொண்ட நிகழ்வு சாத்தூர் மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கொரோனா வைரஸ் பரவி வரும் இந்த கொடிய காலகட்டத்தில் குடும்ப வன்முறைகள் குறைந்த பாடில்லை.

இந்த நிலையில், குடும்ப தகராறு காரணமாக தந்தையும் மகனும் தற்கொலை செய்து கொண்டு ஒரே நேரத்தில் இறந்த செய்தி இன்றைய பொழுதை மேலும் கனமாக்கியுள்ளது.

மாரிக்கண்ணன்(29) மற்றும் அவரது மனைவி சங்கரேஸ்வரி (23) தம்பதிகள் சாத்தூர் அருகே உள்ள போத்திரெட்டிபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள். தனியார் வாகன ஓட்டுநரான மாரிக்கண்ணன், இரு வருடங்களுக்கு முன்பு தனது அத்தை மகளையே பெரியோர்களின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். ஆனால் அவரது மனைவி சங்கரேஸ்வரிக்கும் மாரிக்கண்ணனுக்கும் சேர்ந்து வாழத்தொடங்கியது முதல் சண்டை சச்சரவு ஏற்பட்டுள்ளது.

இருப்பினும் இவர்களின் கல்யாணப் பரிசாக கடந்த வருடம் மவுனி கனேஷ் (1) என்ற ஆண் குழந்தை பிறந்தது. தற்போது வீட்டில் இருக்கும் இவருக்கும் மனைவி சங்கரேஸ்வரிக்கும் சண்டை முற்றி விரக்தி அடைந்த மாரிக்கண்ணன் தனது ஒரு வயது பச்சிளம் குழந்தைக்கு விஷம் கொடுத்து, தானும் அதே விஷத்தை அருந்தி தற்கொலை செய்துள்ளார்.

கணவன் செய்த செயலை அறிந்த சங்கரேஸ்வரி பதறியடித்து கொண்டு உடனடியாக தனது உறவினர்களுக்கு தகவல் அளித்துள்ளார். தகவலை அறிந்து வந்த உறவினர்கள் குழந்தையையும், மாரிக்கண்ணனையும் உடனடியாக வாகனத்தில் ஏற்றிக்கொண்டு அருகில் இருக்கும் சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

ஆனால் மகனும் தந்தையும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். தற்கொலை குறித்து அறிந்த இருக்கன்குடி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து உறவினர்களிடமும் மாரிக்கண்ணன் மனைவி சங்கரேஸ்வரியிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!