சென்னையில் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களில் 98% பேருக்கு எந்தவித அறிகுறியும் இல்லை – அதிர்ச்சி தகவல்!

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் தலைநகர் சென்னையில்தான் கொரோனா தொற்று மிக வேகமாக பரவி வருகிறது. சென்னையில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை இரண்டு இலக்கங்களை தாண்டியே உள்ளது.

நேற்று மாலை சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின் படி, சென்னையில் மட்டும் 768 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவலைக்கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது.

இந்த நிலையில், சென்னையில் இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறும் போது, சென்னையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் 98 சதவீதம் பேருக்கு எந்த வித அறிகுறியும் இல்லை என்று தெரிவித்துள்ளார். மேலும், பாதுகாப்பு கருதியே கோயம்பேடு சந்தையில் சில்லறை விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது என்று மாநகராட்சி ஆணையர் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!