‘கொரோனா’ தொற்றாளர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்குகிறது! காரணம் கடற்படையினரே?

இலங்கையில் மேலும் 06 கொரோனா நோயாளி அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன்படி வைரஸ் தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை 982 ஆக அதிகரித்துள்ளது.நேற்று மாத்திரம் 11 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் ஐவர் கடற்படையினர்.

559 பேர் குணமடைந்துள்ளனர். 424 பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது. ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!