கதைகளில் வரும் சுப்பர் ஹீரோக்களான பெட்மேன் மற்றும் கெப்டன் அமெரிக்கா ஆகிய இருவரும் இணைந்து எரிந்துகொண்டிருந்த வீட்டிலிருந்து பூனை ஒன்றை காப்பாற்றிய சம்பமொன்று அண்மையில் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது.
அமெரிக்காவின் மில்டன் எனும் இடத்தில் கட்டடம் தீப்பிடித்து எரிந்துள்ளது. இக்கட்டடத்திற்கு அருகில் சிறுவர்களுக்கான நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது. இதில் ஜோன் புக்லேண்ட் மற்றும் ட்ரோய் மார்கம் என்பவர்கள் பெட் மேன் மற்றும் கெப்டன் அமெரிக்கா ஆகியோரைப் போன்று உடையணிந்து கலந்து கொண்டுள்ளனர்.
இவர்களில் பெட்மேன் வேடமிட்டிருந்த ஜோன் என்பவர் முன்னால் தீயணைப்பு படைவீரராவார். இதனால் அருகில் தீப்பற்றியுள்ளதை புகையின் நிறத்தினால் அறிந்து அந்த இடத்திற்கு இருவரும் விரைந்துள்ளனர். இதன்போதே எரிந்த வீட்டில் சிக்கியிருந்த பூனைனை இவர்கள் காப்பாற்றியுள்ளனர்.
சம்பவம் இடம்பெற்ற வேளையில் வீட்டு உரிமையாளர்கள் அங்கிருக்கவில்லை. இதனால் எவருக்கும் காயங்களோ உயிரபத்தோ ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது. இச்சம்பவம் இடம்பெற்ற இடத்திலிருந்த சிறுவர்கள் நிஜமாகவே இது பெட்மேன் என நம்பியுள்ளனர்.
















