கஞ்சாவை கீரையாக அரிந்து சோற்றுடன் வைத்துப் பார்சலாக்கி சிறையிலுள்ள தனது கணவருக்கு கொடுக்க முற்பட்ட பெண்ணொருவரை கைது செய்துள்ளதாக காலி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்துருவையைச் சேர்ந்த பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார்.
கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டுக்காக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கணவருக்கு எடுத்துச்சென்ற உணவுப் பார்சலில் கஞ்சாவை கீரை போல் அரிந்து வைத்து கொடுக்க முயற்சித்தபோது சிறைச்சாலை அதிகாரிகளினால் கைது செய்யப்பட்ட இப்பெண் காலி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
















