கடற்படையினரின் முற்றுகையில் அனலைதீவு!

யாழ்ப்பாணம் அனலைதீவில் கடற்படையினர் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படும், 3 பேரைக் கைது செய்வதற்காக தீவு முழுவதையும் கடற்படையினர் தமது முற்றுகைக்குள் கொண்டு வந்துள்ளனர்.

இத்தாக்குதலில் கடற்படை அதிகாரியும், சிப்பாயும் காயமடைந்துள்ளதுடன் தாக்குதல் நடத்தியவர்கள் தலைமறைவாகியுள்ளனர்.

நேற்றுமுன்தினம் இரு குழுக்களுக்கிடையில் முறுகல் ஏற்பட்டுள்ளது. இதனை கடற்படையினர் தலையிட்டு தீர்த்து வைத்துள்ளனர்.

இதனையடுத்து நேற்று குறித்த பிரச்சினையுடன் தொடர்புடைய நபர் ஒருவர் கடற்படை முகாமிற்கு சென்று மதுபோதையில் கடற்படையினரை தகாத வார்த்தைகளால் பேசியதுடன், கடற்படை முகாமிற்குள் நுழையவும் முயற்சித்துள்ளார். இதனால் கோபமடைந்த கடற்படையினர் அவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதனால் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக கடற்படை அதிகாரியும், சிப்பாயும் காயமடைந்துள்ள நிலையில் தாக்குதல் நடாத்தியவர்கள் தலைமறைவாகியுள்ளனர்.

குறித்த நபர்களை தேடி தற்போது கடற்படையினர் தீவு முழுவதும் சல்லடைபோட்டு தேடுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!