“பிரபாகரனின் மக்களை உடனடியாக மாற்ற முடியாது” ஒரே பார்வையில்…
TNAயின் தேர்தல் கொள்கை விளக்க அறிக்கையை விமர்சிக்க போவதில்லை தோற்கடிப்பதே அதற்கான தீர்வு – டளஸ் அழகப்பெரும
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் கொள்கை விளக்க அறிக்கையை விமர்சிக்க போவதில்லை எனவும் அந்த கொள்கை விளக்கத்திற்கு வழங்க வேண்டிய சிறந்த தீர்வு அதனை முன்வைத்த வடக்கில் அந்த கூட்டமைப்பை தோற்கடிப்பதாகும் என அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
இவ்வாறான கொள்கை விளக்கத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யுத்தம் முடிவடைதற்கு முன்னரும் முன்வைத்துள்ளது. 2009 ஆம் ஆண்டு போருக்கு முடிவுக்கு கொண்டு வரப்பட்ட பின்னர் அது தோற்கடிக்கப்பட்டது.
அந்த கொள்கை தோற்கடிக்கப்பட்ட பின்னர் சயனைட் குப்பிக்கும் ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. சயனைட் குப்பிக்கு ஓய்வு வழங்கப்பட்டாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீண்டும் அதனை பெற்றுக்கொடுக்க முயற்சித்து வருகிறது.
முழு நாடும் ஐக்கியப்படுத்தப்பட்டுள்ள இந்த சந்தர்ப்பத்தில் மீண்டும் அப்படியான நிலைமை ஏற்பட எந்த விதத்திலு; இடமளிக்கப்பட மாட்டாது. 30 வருடகாலம் போரில் துன்பங்களை அனுபவித்த மக்களின் உதவியுடன் கூட்டமைப்பின் கொள்கை விளக்கத்தை தோற்கடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அழப்பெரும குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்துள்ள தேர்தல் கொள்கை விளக்கம் இலங்கை அரசியல் அமைப்புச் சட்டத்தை மீறியது என அறிவிக்க நீதிமன்றில் வழக்கு
வடக்கு மாகாண சபைத் தேர்தலுக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்துள்ள தேர்தல் கொள்கை விளக்கமானது இலங்கை அரசியல் அமைப்புச் சட்டத்தை மீறியது என அறிவிக்குமாறு கோரி தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர உயர்நீதிமன்றத்தில் வழக்கொன்றை தாக்கல் செய்துள்ளார்.
இலங்கை அரசியல் அமைப்புச் சட்டத்தின் படி பிரிவினைவாத்தை தூண்டுவது, அதற்கு துணைபோவது, தனிநாடு கோருவது என்பது தண்டனைக்குரிய குற்றங்களாகும் என அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனு தொடர்பாக நீதிமன்றம் தெளிவுப்படுத்தும் வரை வடக்கு மாகாண சபைத் தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் எனவும் குணதாச அமரசேகர கோரிக்கை விடுத்துள்ளாhர்.
மனுவில் பிரதிவாதிகளாக இலங்கை தமிழரசு கட்சியின் செயலாளர் மாவை சேனாதிராஜா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
வடக்கு மாகாண சபையை கைப்பற்றி வடக்கில் பிரிவினைவாத நடவடிக்கைகளை எடுக்க முயன்றால் அதற்கு இடமளிக்கப் போவதில்லை:-
வடக்கு மாகாண சபையை கைப்பற்றி வடக்கில் பிரிவினைவாத நடவடிக்கைகளை எடுக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முயற்சித்தால் அதற்கு எந்த வகையிலும் இடமளிக்க போவதில்லை என சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண சபையில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை பெற்று ஆளுநருக்கு எதிரான யோசனை ஒன்றை கொண்டு வந்து நிறைவேற்றுவதே கூட்டமைப்பின் நோக்கம் என புலனாய்வு பிரிவினருக்கு தெரியவந்துள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கில் கூடிய அதிகாரங்களை பெறுவதை தடுக்க ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முதலமைச்சர் வேட்பாளரான அங்கஜன் இராமநாதன் கடும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தமிழீழம் உருவாவதை தடுக்க கூட்டமைப்பு ஆட்சியமைக்க இடமளிக்கக் கூடாது: விமல் வீரவன்ச
சர்வதேச ரீதியில் அபகீர்த்தி வந்தாலும் பரவாயில்லை. 13ஆவது திருத்தச்சட்டத்தின் முழு அதிகாரங்களுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பை வட மாகாணத்தில் ஆட்சியமைக்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இடமளிக்கக் கூடாது. வடக்கில் சுயாட்சி ஏற்பட ஆளும் கட்சியின் பங்காளிகளும் பிரிவினைவாதிகளுக்கு உதவிகளைச் செய்கின்றனர் என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் அமைச்சருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.
13 ஆவது திருத்தச் சட்டத்தில் காணப்படுகின்ற பொலிஸ்இ காணி மற்றும் மாகாணங்களை ஒன்றாக இணைக்கும் அதிகாரங்களை வட மாகாண சபை தேர்தலுக்கு முன்னர் இல்லாதொழிக்குமாறு வலியுறுத்தப்பட்ட போதிலும் ஆளும் தரப்பிற்குள் இருந்த பலரினால் அதற்கு தடை விதிக்கப்பட்டது. ஆனால் வட மாகாண சபையின் தேர்தலின் பின்னர் கூட்டமைப்பினரடம் ஆட்சி போனால் வடக்கில் தனி சுயாட்சி ஏற்படும் அச்சுறுத்தல் தொடர்பில் தற்போது யாரும் பேசுவதில்லை எனக் குறிப்பட்டார்.
தூதரகங்களை ஆலயங்களாக கருதி வழிபடுபவர்களிடம் தேசப்பற்றை எதிர்பார்க்க முடியாது. மூன்று மாகாணங்களிலும் தேர்தல் நடைபெறுகின்றது. ஆனால் இந்த மாகாண சபை தேர்தலில் பிரதான கட்சிகள் எவையும் விஞ்ஞாபனத்தை வெளியிடவில்லை. ஆனால்இ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வட மாகாண தேர்தலுக்கான தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டுள்ளது. இத் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டுள்ள விடயங்களானது தனி தமிழீழத்திற்கான முன்னெடுப்புக்களாகும் என்றார்.
இந்த கொள்கையுடன் கூட்டமைப்பு வடக்கில் வெற்றி பெற்றால் தமது தமிழீழ கொள்கைகளுக்கு மக்கள் ஆணை வழங்கி விட்டார்கள் எனக் கூறி சர்வதேசத்தின் கவனத்தை மேலும் வலுவான நிலையில் பெற்று நாட்டை பேராபத்தில் தள்ளி விடும் சூழலே காணப்படுகின்றது. இதற்காக விக்கினேஸ்வரன் உள்ளிட்ட கூட்டமைப்பினர் வெள்ளவத்தையிலும் கூட்டங்களை நடத்தி மூன்றிலிரண்டு பெரும்பான்மை ஆதரவைக் கோருகின்றனர் எனவும் குறிப்பட்டார்.
அது மட்டுமன்றி தற்காலிக அடையாள அட்டைகளையும் குறிப்பிட்ட சில அதிகாரிகளுடன் இணைந்து கூட்டமைப்பு வழங்குகின்றது. இது குறித்து தேர்தல்கள் ஆணையாளர் கவனம் செலுத்த வேண்டும். இவர்களின் பிரிவினைவாத நிகழ்ச்சி நிரலை வலுப்படுத்தவே ஐ. நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கை வந்தார் எனவும் தெரிவித்தர்ர.
புது மாத்தளன் முள்ளிவாய்க்கால் போன்ற பகுதிகளுக்கு விஜயம் செய்த பின்னர் அங்குள்ள பொதுமக்களை சந்தித்து நவநீதம் பிள்ளை பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க தனது முழு அதிகாரத்தையும் பயன்படுத்துவேன் என உறுதியளித்துள்ளார் எனக் குpப்பிட்டார்.
ஆகவேஇ நிலைமை மோசமாகவே உள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உடனடியாக தனது முழு அதிகாரத்தையும் வடக்கிற்கு பிரயோகித்து தமிழீழம் உருவாவதை தடுக்க வேண்டும். அதேபோன்று கூட்டமைப்பை ஆட்சி செய்ய இடமளிக்கக்கூடாது எனக் கூறினார்.
பிரபாகரனின் மக்களை உடனடியாக மாற்ற முடியாது: உள்ளக சுயநிர்ணய உரிமையை வழங்கினாலும் நாடு பிரியும்: நிமால் சிறிபால டி. சில்வா
சையன் குப்பியைக் காட்டி ஈழக் கனவை உருவாக்கிய மக்களை உடனடியாக மாற்ற முடியாது. வட மாகாண சபைத் தேர்தலை முன்னிட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புமுன்வைத்துள்ள தேர்தல் விஞ்ஞாபனமானது நாட்டை பிரிக்கும் முயற்சிக்கே வித்திட்டுள்ளது. உள்ளக சுயநிர்ணய உரிமையை வழங்கினாலும் அதன் மூலமும் நாடு பிரியும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவரும் அமைச்சருமான நிமால் சிறிபால டி. சில்வா தெரிவித்தார்.
எவ்வாறெனினும் தேர்தலின் பின்னர் கூட்டமைப்பு நாட்டை பிரிக்கும் முயற்சியில் ஈடுபட்டாலோ அல்லது தேசிய ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் ஏற்படும் வகையில் செயற்பட்டாலோ அதனை தடுப்பதற்கான மருந்து எம்மிடம் இருக்கின்றது. அந்த மருந்தை உரிய நேரத்தில் உரிய வகையில் நாம் பயன்படுத்துவோம் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
வடக்கிலும் வெற்றிபெறவே ஆளும் கட்சி எதிர்பார்க்கின்றது. எனினும் மக்களின் தீர்ப்பு எவ்வாறு அமைகின்றதோ அதனை ஜனநாயக ரீதியில் ஏற்றுக்கொள்ள நாங்கள் தயாராக இருக்கின்றோம் என்றும் அவர் கூறினார்.
நாட்டின் தேசிய ஒருமைப்பாட்டை சீர் குலைப்பதற்கோ அல்லது நாட்டை இரண்டாக உடைப்பதற்கோ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முயற்சிக்குமானால் அதனை தடுப்பதற்கு என்ன செய்யவேண்டும் என்று எங்களுக்குத் தெரியும். அதற்குத் தேவையானதை உரிய நேரத்தில் உரிய முறையில் நாங்கள் முன்னெடுப்போம். எனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகள் குறித்தோ அதன் முதலமைச்சர் வேட்பாளரின் கூற்றுக்கள் குறித்தோ நாங்கள் குழப்பம் அடையவேண்டியதில்லை. தேவையான நேரத்தில் என்ன செய்யவேண்டும் என்று எங்களுக்கு நன்றாகவே தெரியும் எனவும் தெரிவித்தர்ர.
மேலும் வாக்குகளை பெறுவதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இவ்வாறு இனவாத கூற்றுக்களை வடக்கில் வெளியிட்டுவருகின்றது. இதனை மக்கள் புரிந்துகொள்வார்கள். எனவே மக்கள் இதனை ஆதரிக்கின்றார்களா? என்பதனை பார்க்கவேண்டும். காரணம் தேர்தல் காலத்தில் இவ்வாறு மக்களின் உணர்வுகளைத் தூண்டி வாக்குகளை பெறும் முயற்சிகள் வடக்கில் மட்டுமல்ல தெற்கிலும் இடம்பெறுவது வழக்கமாகும் என்றார் அவர்.
ஆனால் வாக்குகளை பெறவேண்டும் என்ற நோக்கத்தைத் தாண்டி தேர்தலின் பின்னரும் கூட்டமைப்பு இவ்வாறான நாட்டை துண்டாடும் வகையிலான செயற்பாட்டில் ஈடுபட்டால் அதற்கு என்ன மருந்து வழங்கவேண்டும் என்று எங்களுக்கு நன்றாக தெரியும். மேலும் மக்களுக்கு உண்மையும் யதார்த்தமும் நன்றாக தெரியும். எனவே அவர்கள் சிந்தித்து தேர்தலில் முடிவெடுப்பார்கள். மக்கள் புத்திசாலித்தனமானவர்கள் எனக் குறிப்பட்டார்.
நாட்டின் அரசியலமைப்பையும் இறைமையையும் தாண்டி எவரும் செயற்பட முடியாது. அவ்வாறு யாராவது செயற்பட்டால் அதற்கு என்ன செய்யவேண்டும் என்று எங்களுககுத் தெரியும். இது குறித்து தற்போது குழப்பமடையவேண்டியதில்லை. மருந்து எம்மிடம் உள்ளது எனவும் எச்சரித்தார்.
காரணம் எமக்கு உள்ள அனுபவங்களின்படியும் எமக்குள்ள அறிவின்படியும் பார்க்கும்போது வட மாகாண சபைத் தேர்தலை முன்னிட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்துள்ள தேர்தல் விஞ்ஞாபனமானது நாட்டை பிரிக்கும் முயற்சிக்கே வித்திட்டுள்ளது என்றார்.
அத்துடன் தற்போது அவர்கள் உள்ளக சுயநிர்ணய உரிமை குறித்து பேசியுள்ளனர். உள்ளக சுயநிர்ணய உரிமையை வழங்கினாலும் அதன் மூலமும் நாடு பிரியும் என்பதனை வலியுறுத்துகின்றோம். இவை அனைத்தும் எமக்குத் தெரியும். எவ்வாறான சுய நிர்ணய உரிமையை வழங்கினாலும் ஆபத்து உள்ளது எனக் குறிப்பிட்டார்.
வடக்கு மக்கள் அனைவரும் கூட்டமைப்புடன் உள்ளதாக நாம் கருத முடியாது. பாராளுமன்ற உறுப்பினர்களை விட பொது மக்களே எமக்கு முக்கியமானவர்கள். அந்த மக்கள் தற்போது எமது பக்கம் வர ஆரம்பித்துள்ளனர். இது இலகுவான விடயமல்ல. கடந்த 30 வருடங்களாக பிரபாகரன் சயனைட் குப்பியை காட்டி ஈழம் என்ற கனவைக் காட்டி வந்தவர். எனவே அந்த மக்களை உடனடியாக எமது பக்கம் திருப்ப முடியாது. அதற்கு காலம் தேவை. அதனையே படிப்படியாக செய்துவருவதாக தெரிவித்தர்ர.
வடக்கில் வெற்றிபெறுவது எமது நோக்கமாகும். ஆனால் வடக்கு மக்கள் 100 வீதம் எங்களுக்கு வாக்களிப்பார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்க முடியாது. எனினும் கணிசமானளவு வாக்குகள் எங்களுக்கு கிடைக்கும். எவ்வாறெனினும் வட மாகாண சபைத் தேர்தல் விடயத்தில் மக்களின் தீர்ப்பு எவ்வாறு அமைகின்றதோ அதனை ஜனநாயக ரீதியில் ஏற்றுக்கொள்ள நாங்கள் தயாராக இருக்கின்றோம். மக்களின் தீர்ப்புக்கு நாங்கள் எதிராக செல்ல முடியாது. அதனை ஏற்போம் என்றார் அமைச்சர்.
Via: GTN-
















