பொத்துவில் விகாரை காணி அளவீட்டு பணிகளை தேர்தல் வரை நடத்தக் கூடாது! – நீதிமன்றம் உத்தரவு.

பொத்துவில், முகுது மஹா விகாரைக்கான காணி அளவீட்டுப் பணிகளை பாராளுமன்றத் தேர்தல் நிறைவடையும் வரை இடைநிறுத்தி வைக்குமாறு நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.

பொத்துவில் பிரதேசத்தின் முகுது மஹா விகாரைக்கான காணி தொடர்பில் ஏற்பட்ட சர்ச்சையையடுத்து தொல்லியல் ஆய்வுத் திணைக்களத்தினால் பொத்துவில் நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே நீதிவான் எம்.எச்.முஹம்மட் றாபி இவ்வுத்தரவை பிறப்பித்துள்ளார்.

வழக்கு விசாரணையில் பிரதிவாதிகளாக குடியிருப்பாளர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பர், சிரேஷ்ட சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன் மற்றும் சட்டத்தரணி முஹம்மட் கதீர் ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.

இதன்போது, இக் காணி தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரமும் தொல்லியல் ஆய்வுத் திணைக்களத்தினால் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கையின் படியும் 30 ஏக்கர் காணியை மாத்திரமே அளவீடு செய்வதற்கு அத்திணைக்களத்திற்கு அதிகாரமுள்ளதென சுட்டிக்காட்டிய ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பர், அதனை அளவீடு செய்த பின்னர் அது தொடர்பிலான அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென்றும் இந்த 30 ஏக்கர் காணிக்குள் கட்டடம் அமைப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள 13 குடியிருப்பாளர்களும் இல்லையென்று ஊர்ஜிதமாகும் பட்சத்தில் அவர்கள் தமது இடங்களில் கட்டட நிர்மாணங்களை மேற்கொள்வதற்கு அனுமதிக்கப்பட வேண்டுமென்றும் வாதிட்டார்.

அதேவேளை, 30 ஏக்கர் காணிக்குள் இந்த குடியிருப்பாளர்களுக்கு ஜயபூமி காணி உறுதிப்பத்திரம் வழங்கப்பட்டிருப்பதனால், சட்டபூர்வமாகவே அவர்கள் அங்கு குடியிருக்கிறார்கள் என்றும் ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் சுட்டிக்காட்டினார்.

இந்த வழக்கைப் பொறுத்தவரையில் தொல்லியல் ஆய்வுத் திணைக்கள உத்தியோகத்தர்களோ பொலிஸாரோ அந்த இடத்திற்குச் சென்று, மக்களுக்கு மத்தியில் தேவையற்ற பதற்றத்தை ஏற்படுத்துகின்ற செயற்பாட்டை இத்தேர்தல் காலம் முடியும் வரை செய்யக்கூடாதென்றும் அவர் அழுத்தமாக கேட்டுக்கொண்டார்.

இதனையடுத்து, தொல்லியல் ஆய்வுத் திணைக்களத்தின் சார்பில் வருகை தந்திருந்த உத்தியோகத்தர்களிடம் இவ்விவகாரம் தொடர்பில் நீதிவான் விளக்கம் கோரினார்.

பிரதிவாதிகள் சார்பான சட்டத்தரணியினால் சுட்டிக்காட்டப்பட்ட விடயங்கள் சரியென்றும் ஏற்கனவே 30 ஏக்கர் காணி அளவீடு செய்யப்பட்டிருப்பதாகவும் வரைபடங்களை வரைவதற்காக அரசாங்க நில அளவீட்டுத் திணைக்களத்திற்கு அனுப்பியுள்ளதாகவும் தொல்லியல் ஆய்வுத் திணைக்கள உத்தியோகத்தர்கள் விளக்கமளித்தனர்.

இதனை ஏற்றுக் கொண்ட நீதிவான், இது தொடர்பான அறிக்கை நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டு, சர்ச்சைக்குரிய குடியிருப்பிடங்கள் முகுது மஹா விகாரைக்கான 30 ஏக்கர் காணிக்குள் இருக்கிறதா? இல்லையா? என்பதைத் தீர்மானித்த பின்னர், குடியிருப்பாளர்களை வெளியேற்றுவதா? அல்லது அவர்களது கட்டட நிர்மாணத்திற்கு அனுமதிப்பதா? என்பது தொடர்பில் முடிவு செய்யப்பட்டு, இவ்வழக்கு முடிவுக்கு கொண்டு வரப்படுமென்று அறிவித்ததுடன் அது வரையில், இத்

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!